Thursday, October 22, 2009

நிறைவான வாழ்வு

தலைமையேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் நடத்தைகளை சிறப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டும். எல்லோரிடமும் இன்முகத்துடன் நடக்க பழகி கொள்ள வேண்டும். வேண்டியவர்கள் வேண்டாதவர் என பாகுபாகுபடுத்தி பார்க்கக் கூடாது. தன்னலம் பாராத பொது நலத்தொண்டில் பிரியப்படுவறதாக இருத்தல் வேண்டும். அமைதி, பொறுமை, நிதானம், நீதி நேர்மை சகிப்பு தன்மை இவற்றுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சலுகை என்பதை யாருக்காகவும் செய்யக்கூடாது. வன்முறையை தவிர்ப்பவராக இருத்தல் வேண்டும்.
காட்டுக்கு போனாலும் கூட்டு உதவாது இருவருக்கு மேல் மூவறாகவோ செல்லும்படி நேரிட்டால் உங்களுக்குள் ஒருவரை தலைமை ஏற்க செய்து அவர் சொற்படி நடக்க வேண்டும் தலைமைக்கு கட்டு பட்டுதான் நடக்க வேண்டும் அல்லாமல் ஒழுங்கீனமாக நடக்கக்கூடாது. துலைமையை குறை கூறாமல் தவறுகளிருந்தால் சுட்டி காட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால்
குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அத்தியாவசியமாகும். தாய்பால் கொடுப்பதால் குழந்தை நல்லதிட காத்திரமாகவும், நோய்களை தடுக்கும் வலிவும் உடம்பில் ஏற்படுகிறது. தாயின் குண நலன்கள் பிள்ளை பெற்று குடும்ப நலன்காக்கும் பந்தபாசம் ஏற்பட்டு பெற்றோர்களை காப்பாற்றுவார்கள். குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் குழந்தைக்கு தாயிடம் சுரக்கும் சீம்பால் தான் கொடுக்க வேண்டும். சீம்பால் கெடுதல் அல்ல! சீம்பாலில் குழந்தையின் இதயம், நுரையீரல், மூளை போன்ற முக்கியமான அவயவங்கள் வலுப்பெற்று வளரவும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக் கூடியது! தவறாமல் சீம்பால் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானதும் ஆகும்.

குழந்தை வளர்ப்பு
உங்கள் குழந்தைகளை பாசத்துடன் வளருங்கள். செல்லத்துடன் வளர்த்து விடாதீர்கள். பாசத்துடன் வளரும் குழந்தைகள் பிற்காலத்தி;ல் பாசத்தைகாட்டி பெற்றவர்களை காப்பாற்றும். செல்லத்துடன் வளரும் குழந்தைகள் பின்னாளில் தானும் சீரழிந்து பெற்றவர்களையும் மன வேதனைகளுக்கு ஆளாக்கி தலை குனிவை உண்டாக்கிவிடும்.

அடிமை
பெண்கள் அடிமைகளோ, விளையாட்டு கருவிகளோ, போகப்பொருளோ அல்ல. அவர்களுக்கும் உணர்வுகளும், உணர்ச்சிகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனகிளர்ச்சிகளும், விருப்பு வெறுப்புகளும், உண்டு என்பதை ஆண்கள் (கணவர்கள்) உணர்ந்து நடந்து கொண்டால் வீட்டில் என்றும் இன்ப சூழ்நிலை நீடிக்கும்.

அடக்கம்
பெண்கள் நவ நாகரீக உடையணிந்து தங்களை அழகுபடுத்திக் கொள்வதும் அலங்கரித்துக் கொள்வதம் தங்கள் கணவனுக்காகவே அல்லாமல் பிறருக்காக இருத்தல் கூடாது. எனவே நகைகளை அளவுடன் அணியுங்கள். அதிக அல்லாமல் வீண் அலங்காரமோ வீண் ஆடம்பரமோ நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகல்ல வாங்கு சிட்டியும் கால்விரல்களில் பவுன்மெட்டியும் முழங்கை வரை வளையல்களையும் அணிந்து கொள்வதால் பிறரின் ஏக்க பார்வைகளுக்கும் கண்ணெரிக்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும். மேலும் அது நம்மையும் நம் செல்வத்தையும் அழித்துவிடும். இது தேவைதானா? யோசியுங்கள்!

- M.A.P. ரஹமத்துல்லா

No comments: