Saturday, November 7, 2009

ஆனாலும் உண்மை


அன்பானவர்களுக்கு அது தேவை இல்லாதது
உன் எதிரிகளோ நம்ப மறுப்பார்கள்
 
யார் வாழ்க்கையில் நீயும் ஒரு விருப்பாக இருக்கிறாயோ
அவர்களுக்கு உன் வாழ்வில் சிறப்பிடம் அளிக்காதே
ஏனென்றால்
உறவு சமநிலையிலேயே சிறப்படைகிறது

அதிகாலையில் நமக்கு இரண்டு வழிமுறைகள் உண்டு
ஒன்று மீண்டும் தூக்கத்தை தொடர்ந்து கொண்டே கனவு காண்பது
மற்றொன்று, கனவை தேடி அடைவது

நம்மீது அக்கறை உள்ளவர்களை அழவைக்கிறோம்
நம்மீது அக்கறை இல்லாதவர்களுக்காக அழுகிறோம்
நம்மீது அக்கறை இல்லாதவர்கள் மீதே அதிக அக்கறை காட்டுகிறோம்
இது வியப்பேயானாலும் உண்மை
இதை உணர்ந்தால், நம்மில் (தேவையான)மாற்றம் விரைவில் நிகழும்

மகிழ்ச்சியில் இருக்கும்போது உறுதிமொழி எடுக்காதே
சோகத்தில் இருக்கும்போது பதிலளிக்காதே
கோபத்தில் முடிவெடுக்காதே
இருமுறை யோசித்து, ஒரு முறையிலேயே சரியாய் செயல்படு

நேரம் என்பது ஆறு போன்றது
தொட்ட நீரை மீண்டும் தொடமுடியாது
ஏனென்றால் கடந்தது நம் முன் மீண்டும் நடக்காது

நான் எப்பொழுதும் வேலை பழுவிலேயே இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால்
உங்களால் ஓய்வாகவே இருக்க இயலாது

நாளை என்பது என்றும் இன்று வாராது
 

ஆதலால் ஒன்றே செய் நன்றே செய்

அதை இன்றே செய்


source : kayalmakizhnan.blogspot.com
நன்றி;

No comments: