Monday, November 16, 2009

பெண்கள் தங்கள் முகத்தையும் மறைத்தாக வேண்டுமா?

(நபியே!) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகையும் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் அதனின்று (சாதரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)
   ஒருமுறை அபூபக்ரு(ரழி) அவர்களின் மகள் அஸ்மா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில்  தன்மீது ஓர் மெல்லிய ஆடை அணிந்த நிலையில் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) தமது முகத்தை திருப்பிக்கொண்டு அஸ்மாவே! ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டால் இதுவும், இதுவும் நீங்குதலாக என்று தமது முகத்தையும், மணிக்கட்டு வரையுள்ள கையையும் சமிக்கை செய்து காட்டி வேறு பகுதிகளைப் பிறர் பர்ப்பது கூடாது என்று கூறினார்கள் (அஸ்மா(ரழி), அபூதாவூத்)
   மேற்காணும் வசனத்தையும், ஹதீஸையும் முன்வைத்து ஒரு பெண் தனது முகத்தையும், மணிக்கட்டு வரைத் தனது இரு கைகளையும் தவிர மற்ற பாகங்கள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும் என்பதை அறிகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
Thanks to : http://www.readislam.net

No comments: