Wednesday, November 18, 2009

இறைவனின் திருப்பெயரால், ஐக்கிய அரபு அமீரகம் துபை மாநகரில் மாபெரும் இரத்த தான முகாம்!

.ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா
  மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்...                                                                         
                                                   அல்குர்ஆன் 5:32
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து தமிழகத்தில் முஸ்லீம்களிடம் புரையோடியுள்ள மூடப்பழக்கவழக்கங்கள், வரதட்சனை போன்ற செயல்பாடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவதோடு மட்டுமின்றி, தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை எற்படுத்தும் விதமாக மாற்றுமத சகோதரர்களிடத்தில் இஸ்லாத்தினைப் பற்றின சந்தேகங்களைப் போக்கும் வண்ணம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் நிகழ்ச்சிகளையும் செய்து வருகின்றது. இது மட்டுமின்றி மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான, சமூக சேவைகளில் மிகவும் சிறந்த சேவையான உயிர்காக்கும் இரத்ததான தான முகாம்களை நடத்தியும், இலவசமாக இரத்த தானம் செய்தும் வருகின்றது. இத்தகைய அருஞ்செயல்களை  தொடர்ந்து செய்து வருவதால், தமிழகத்தில் இரத்த தானத்தில் தொடர்ந்து மூன்று வருட காலமாக முதல் பரிசினையும் பெற்று வந்திருக்கிறது. அதனுடைய கிளைகளாக வளைகுடாவில் செயல்பட்டு வரும் வளைகுடா வாழ் சகோதரர்கள், கடல் கடந்து வாழ்வாதாரம் தேட வந்த இடத்திலும் அத்தகைய சேவைகளை தங்களால் இயன்றவரை  செய்து வருகின்றார்கள். அதனடிப்படையில் துபை மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையாக செயல்படும், ஜமாஅத்துத் தவ்ஹீத் - துபை, துபையில் உள்ள அல்வாசல் மருத்துவம
னையுடன் இணைந்து இறைவன் நாடினால் வருகின்ற 04.12. 2009 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இரத்த தானம் முகாம் நடத்தவிருக்கின்றது. இத்தகைய செயல்களின் மூலம் மனித சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுகின்றது, ஏற்ற தாழ்வுகள் குறைகின்றது என்றால் அது மிகையல்ல. இரத்ததானம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளவும்
From :.

.சாதிக் அலி  050-5756518
J.SADHIK ALI

No comments: