Thursday, November 5, 2009

இல்லறம்


ஆண் பெண் இருவரும் மல்யுத்த வீரர்களாய் நின்றால் வாழ்க்கை குத்துப்பட்டே செத்துப்போகும். வீரத்தால் சாதிப்பது எதுவும் நிலைக்காது. அன்பால் சாதிப்பது மட்டுமே என்றென்றும் தொடரும்.

ஆண் பெண்ணைச் சார்ந்து இருத்தலும் பெண் ஆணைச் சார்ந்து இருத்தலுமே இல்லறம். சார்ந்திருப்பதே காதல். சார்ந்திருத்தலே தாய் பிள்ளை பாசம். சார்ந்திருத்தலே உலக உறவுகளின் ஆணிவேர். சார்ந்திருப்பது அடிமைத்தனமல்ல தூய்மையான அன்பு.

தன் வலிமையையெல்லாம் மீறி நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன் என்று சொல்லுமிடத்து எத்தனை உயர்வான காதல் எழுந்து நர்த்தனம் ஆடுகிறது.

தொட்டதற்கெல்லாம் நீ உயர்வா நான் உயர்வா என்று வீரம் பேசினால் வாழ்க்கை வாடி வதங்கி செத்து சுண்ணாம்பாகிவிடும்
தொகுப்பு: குடும்பம்  source : http://anbudanbuhari.blogspot.com
நன்றி:அன்புடன் புகாரி

No comments: