Monday, November 16, 2009

மரபுக் கனவுகள்—by துரை.

வெண்பா - நான்

பாரதியின்.........!


வேரோடு என்னையே வீழ்த்திய தாய்எண்ணி
யாருமி ருந்துவிடா தீர்பாரும்; தீந்தனலாய்ப்
பாரதிரத் தீயோரை வெந்துதணிப் பேன்;நானே
பாரதியின் அக்கினிக் குஞ்சு

[29-09-09]
[இன்னிசை/ஒருவிகற்பம்]

வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாராதி ருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..

[04-10-09]
[நேரிசை/ஒருவிகற்பம்]

வானும் நானும்


ஒற்றைத் தலையணையில் ஓட்டுவெளி யில்தனியே
வெற்றுத் தரையினில் வீழ்ந்திருந்தேன் - சுற்றிவரும்
வெண்மேகம்; எட்டடியில் வட்டநிலா; வீழ்ந்தது
என்கா லடியில்சொர்க் கம் .

நான்


தன்னையெது வும்மிகா தென்றதோர் உள்மனக்
கணக்கிட் டபடியேயி ருந்திடுவேன் - உண்மையில்
தன்னை உணராமல் எண்ணத்துள் மூழ்கியே
தன்னையும் தாண்டா தவன்

திருத்தம் :

தானறியா ஒன்றிருக்கா தென்றதோர் உள்மனதில்
நானறிந்த வாறிருப்பேன் நம்புவீர் -- ஞானமாய்
தன்னை உணராமல் தன்எண்ணம் மூழ்க்கியே
தன்னையும் தாண்டா தவன்
--சி. ஜெயபாரதன்


மாணவன்


விரைவாய்த் துவங்கும் வகுப்பினில் வெண்பா
தரையில் அமர்ந்து படிப்பேன் - துரையின்
கடைசி வரிசையின் வேண்டுகோள் ஏற்று
தொடங்க வருவீர் விரைந்து

நன்றி    :       http://marabukkanavukal.blogspot.com

No comments: