Monday, November 16, 2009

கருக்கலைப்பு--- by நிந்தவூர் ஷிப்லி


கருக்கலைப்பு


ஜனனங்களுக்காய்

படைக்கப்பட்ட

கருவறைகள்..

இன்றோ

மரணங்களுக்கான

கல்லறையாய

புதிய பரிமாணம்


உயிரணுக்களின்

உயிர்கள்

அணுவணுவாய்

கொல்லப்படுகிறது

மருத்துவச் சித்ரவதைகளுடன்....


தொப்புள்கொடிகளே

தூக்குக்கயிறுகளாகின்றன

இந்தக்கருக்கலைப்பில்....“


புக்களை தீயிட்டு

எரிப்பதைப்போல”

என்பதை தவிர

வேறெந்த உவமைகளும்

பொருந்தப் போவதில்லை

இந்த அகால மரணங்களுக்கு...


மனிதாபிமானம்

செத்துப்போய்விட்டதை

பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா

சிசுக்கொலைகள்...?


உண்டான பிறகு

சிதைப்பதை விட்டுவிட்டு

உண்டாகும் முன்

சிந்தியுங்கள்

ஏனெனில்நீங்கள்

சிதைப்பது உயிர்களை அல்ல

இவ்வுலகின்

நாளைய விடிவை !
 ---------------------------
நிந்தவூர் ஷிப்லி
------------------------------
நன்றி     :    http://shiblypoems.blogspot.com/2008/02/blog-post_9462.html             

No comments: