Monday, December 21, 2009

பதிவர்கள் நடித்த குறும்(பு) படம் (காணொளியுடன்) 99% நகைச்சுவை கேரண்டி

சார்ஜாவில் அமீரகத் தமிழ் பதிவர்கள் பட வெளியீடு
"அண்ணாச்சி படத்தை எப்ப வெளியிடலாம்..?"
"டிசம்பர் 18"
அதிர்ந்து போனேன்...என்ன டிசம்பர் 18 ஆ...அவதார், வேட்டைக்காரன் படவெளியீடு என்று உலகத் திரைவுலகமே அதிர்ந்து கொண்டிருந்த
டிசம்பர் 18 இந்தக் குறும்(பு) படம் ரிலீஸா...? இவர் தெரிந்து சொல்கிறாரா...? இல்லை நம்மை நிராகதியாக்க திட்டம் போடுகிறாரா...?இருந்தாலும் துணிந்து ஏற்பாடுகளில் இறங்கினோம்...ஒருவாரம் நண்பர்கள் முகவை முகில், ஊமையன் ஹக்கிம், சிம்ம பாரதி மற்றும் ரியாஸ் பாய் ( கிறுக்கல்கள் ஜெஸீலா கணவர்) போன்றோரின் அயரா உழைப்பில் சத்திரம் திரையரங்கம் ஏ/சி தயார் செய்யப்பட்டது....


(போஸ்டர் வடிவமைப்பாளருக்கு ஆணிகள் சற்று அதிகமானதால் கடைசி நொடியில் இந்த போஸ்ட்டரை நானே வடிவமைக்க வேண்டியாதாயிற்று...என்ன எதோ பரவாயில்லையா?)



பதிவர்களுக்கு வழக்கம் போலக் குழுமத்தில் அண்ணாச்சி அழைப்பு விட எதிர்பாராத அளவிற்கு அமோக வரவேற்பு...( பதிவில் அழைப்பு விட திரையரங்கு அளவு இடம் தரவில்லை) பதிவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து 30 பேர் முன்பதிவு செய்ய ஹவுஸ் புல் பலகை மாற்றப் பட்டது.என்றாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு பயம்...அண்ணாச்சி இது சரி வருமா..? என்றேன்.
"கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காமே வேலையைப் பாருன்னு" சொல்லிட்டாரு...

2009 டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை...

12 மணிக்கே எல்லோரும் வந்து குழுமினர்...ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு நாங்க சொல்லிக்கிட்டு திரிந்தாலும் உண்மையில் வருகை தந்த பதிவர்கள் அதை நிருபித்தார்கள்...
இந்த முறை இஸ்மத் பாய் பிரியாணி சட்டியை ரியாஸ்பாய் கைப்பற்ற முயல பெரும் போராட்டத்திற்கு பின் இஸ்மத்பாயே பிரியாணிச் சட்டியை கைப்பற்றினார்.


(இந்த முறை சரி அடுத்த முறை நான் தான் ஆமா, என்று அமந்திருப்பவர் ரியாஸ் பாய், பிரியாணியுடன் வெற்றிகளிப்பில் அமர்ந்திருப்பவர் இஸ்மத் பாய்)




சரியாக 2:30 மணிக்கு படம் ஆரம்பிக்கப்பட்டது...பதிவர்களின் ஆரவாரத்துடன் 30 நிமிடங்கள் ஓடியது...எல்லோர் முகத்திலும் சந்தோசம். இதைத்தானே எதிர் பார்த்தது...படம் முடிந்ததும் பாராட்ட ஒன்று கூடிய பதிவர்கள் என்னைத் திக்குமுக்காட செய்ய ஒரு வழியாக எஸ்கேப்...( எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்! )

அடுத்து சில நிமிடங்களில் இதில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கையைச் சார்ந்த காவியப் புலவர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் உரையாற்றிய அவர் தன் உரையில்,
“எத்தனையோ வேறுபாடுகளை நீங்கள் கொண்டிருந்தாலும் நீங்கள் இங்கு வந்து தமிழால் இணைந்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.இது போன்ற நிகழ்வுகளின் பதிவு எதிர்காலத்தில் எண்ணிப்பார்க்க இனிமையானது.இந்நிகழ்வில் நானும் ஒரு இளைஞனாக உங்களுடன் பங்கேற்றதில் என் வயதில் பாதி குறைந்தது போல் உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு தந்தமைக்கு உங்களுக்கு நன்றி” என்ற போது பதிவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.



சிறப்பு காட்சி முடிந்து வந்த பதிவர்கள் கூறுகையில் இந்த குறும்(பு)படம் கண்டிப்பாக அரைமணி நேர சிரிப்பிற்கு உத்தரவாதம் என்ற அந்த வார்த்தையில் என்னால் படத்தின் வெற்றியை உணரமுடிந்தது.
"உங்கள் திறன் இப்படிப்பட்ட விளையாட்டுப் படங்களுடன் நின்றுவிடாமல் கொஞ்சம் சீரியசாகவும் ஏதாவது இயக்க முயற்சி செய்யலாமே..?" என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக இருந்தது...கண்டிப்பாக உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெகுவிரைவில் அமீரகத்தை கதைக்களமாக வைத்து ஒரு தரமிக்க குறும்படமொன்றை இயக்கலாமென்றிருக்கிறேன்...செய்யலாமா? என்று மற்றவர்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்...

வெற்றிப் படங்களைத்தரும் பெரிய இயக்குனர்கள் இயக்கியப் படத்தை கூட மற்றவர்கள் பார்த்து விமர்சித்த பின் தான் நாம் பார்க்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட உலகில், நான் ஒரு படம் செய்துள்ளேன் என்றதும் தெரிச்ச்சி ஒடாமல், நாங்களும் வருகிறோம் என்று வந்து, பார்த்து, வாழ்த்தி, பாராட்டி, என்னைத் திக்குமுக்காட வைத்த அனைத்து பதிவர்களுக்கும் மிக்க நன்றி....
உலக வரலாற்றில் முதல் முறையாக பதிவர்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை முதல் சிறப்புக் காட்சி கண்டு வரலாற்றில் தடம் பதித்தவர்கள்...
1)புலவர் ஜின்னாஹ் சர்புதீன்2) ஆசிப் மீரான் 3) குசும்பன்4) கீழை ராஸா 5) ஊமையன் ஹக்கிம்6) முகவை முகில் 7) கிளியனூர் இஸ்மத்8) ராஜாகமால் 9) நான் ஆதவன்10) செந்தில் வேலன்11) சந்திரசேகர் 12) சிம்ம பாரதி
13) ஜெஸீலா குடும்பத்தினருடன் 14) லியோ அண்ணன்15) ஆசாத் அண்ணன் 16) அபூ அப்ஸர் குடும்பத்தினருடன்17) சென்ஷி 18) ஜியாவுதீன் 19) சமீர்
20) பினாத்தல் சுரேஷ் அங்கிள் 21) கலையரசன்22) வினோத் கௌதம்
23) அன்புடன் மலிக்கா குடும்பத்தினருடன்24) கார்த்திக்கேயன்
25) ஹுசைனம்மா குடும்பத்தினருடன்.
"எந்தப்படமானாலும் பின்னி பெடலெடுத்து விமர்சனம் என்ற பெயரில் கிழிகிழியென்று கிழிக்கும் பதிவர்களை அழைத்து படத்தையும் போட்டு காட்டி, பதிவுலேயும் போட்டு விமர்சியுங்கள் என்கிறாயே உனக்கு என்னா தில்லு..?"ன்னு அண்ணாச்சி பக்கத்தில் இருந்து கேட்டுக்கிட்டிருக்காரு..
நல்ல படைப்புகளை பாராட்ட தெரிந்த ஒரு குழுவில் இதை சமர்பிக்கிறேன் பாராட்டினால் அது எங்கள் பாலைப்பதிவுக்கூடத்தைச் சாரும் ( கீழைராஸா, ஆசிப் மீரான், சிம்ம பாரதி, முகவை முகில், ஊமையன் ஹக்கிம்) விமர்சித்தால் அது அனைத்தும் என்னைச் சேரும்...இனி எழுத்து உங்கள் கையில்....

இதில் பார்க்க இயலாதவர்களுக்கு



http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3807&Country_name=Gulf&cat=new
பதிவுலகப்பார்வையில்
1) கிளியனூர் இஸ்மத்
Source : http://sarukesi.blogspot.com/2009/12/99.html










No comments: