Monday, December 21, 2009

மலர்ந்துவிட்ட மல்லிகையின் வாசம்

என் மாமலரே
நீ மொட்டாக நின்றபோதே
மலர்ந்துவிட்ட மல்லிகையின் வாசம்
என்னைத் தீண்டியது
நீ அறிவாயா என்றேன் கண்சிமிட்டியபடி

ஆம்
இந்த மல்லிகைக்கு
மவுனகீதம் பாடத்தெரியும்
என்றாய் பெருமிதத்தோடு

கேட்டது கேட்டது
கேட்கக் கேட்க ஆவலைத் தூண்டி
அநியாயம் செய்தது என்றேன் பூரிப்போடு

உனக்கு மல்லிகை பிடிக்குமா
மல்லியே என்றேன் கிறக்கத்தோடு

பிடிக்குமாடீ
என்று கேட்டால்தான்
பதில் வரும் இனி என்று சிணுங்குகிறாய்


  நன்றி : http://anbudanbuhari.blogspot.com

No comments: