Monday, December 7, 2009

தித்திப்பு மகா சமுத்திரம்


என்னவள் ஒரு கடல்

அவளிடம் தொட்டதெல்லாம்
கடல் கடல் கடல்

அவள் உள்ளம் ஒரு கடல்
உருகும் வார்த்தை ஒரு கடல்
அவள் எண்ணம் ஒரு கடல்

பொங்கும் உணர்வுகளோ
பேரலை ஆர்ப்பரிக்கும் பெருங்கடல்

இருந்தாலும்
என்னைக் கண்டதும்
அவளின் கீழுதடு தாண்டி
தந்தப் பற்கள் தாண்டி
நாவின் அடியில் ஊறுமே ஒரு கடல்
அந்தக் கடல் பற்றிப் பேசுவோமா

அது ஓர் சர்க்கரை வெள்ளம்
என் ஏழாயிரம் பிறப்புக்கும்
இப்பொழுதே வாரிவழங்கும்
தித்திப்பு மகா சமுத்திரம்

 நன்றி:  http://anbudanbuhari.blo 




No comments: