Monday, January 25, 2010

நிலாக் குட்டியை வாடீ என்று வாரியணைத்து

அன்புடன் புகாரி

நிலாக் குட்டியை வாடீ என்று வாரியணைத்து: "
ஒரு குண்டு மல்லியை
அதன் மென்னிதழ் நோகாமல் கிள்ளி
என் சட்டைப்பைக்குள்
கடத்திக்கொண்டு கிறக்கத்தோடு
நடந்த நாட்கள் ஏராளம் ஏராளம்
பெண்ணே என்றேன்

விரல்கள் பூ மல்லியில்
விழிகளோ வானமல்லியில்

நிலாக் குட்டியை
வாடீ என்று வாரியணைத்து
வருடிக்கொண்டே
என் வாலிப வாழ்க்கை
கனவுகளுடன் மிதக்கும் என்றேன்

மகா பொறாமையாய்
இருக்கிறதடா பாவி
என்று கொதித்தாள் என் தோகை

அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

நன்றி http://anbudanbuhari.blogspot.com


No comments: