Saturday, March 27, 2010

வரலாறு படியுங்க எழுத்தாளரே!

 

நைஜீரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை எழுத்தாளருக்கு ஒரு வாசகர் அனுப்பினாராம். உடனே ஞானமரபு துணைகொண்டு எழுத்தாளரும் ஒரு நைஜீரிய-இந்திய ஒப்புமை கட்டுரை வரைந்திருக்கிறாராம். பாழாய்ப்போன தமிழ் இலக்கிய எழுத்துச்சூழலில்தான் இதுமாதிரி நகைச்சுவைகள் நடக்கும். நாவலாசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களாக மாறும் கூத்து இங்கேதான் நடக்கும்.

எழுத்தாளர் நைஜீரியச் சூழலை ஆழமாக ஆற அமர நீண்டகாலமாக அவதானித்து வருகிறாராம். ஏனெனில் அங்கே ‘இஸ்லாம்’ இருக்கிறது. அரேபியாவில் இருந்து இஸ்லாம் அங்கே போனதுதான் இன்றைய நைஜீரிய அவலங்களுக்கு காரணம் என்று வருத்தப்படுகிறார் எழுத்தாளர். எழுத்தாளரின் மனிதநேயத்தை கண்டு நாமெல்லாம் புல்லரித்துப் போகலாம்.

இதோடு விட்டுவிட்டிருக்கலாம் நம் எழுத்தாளர். அடுத்து வரலாற்றினை நோண்டி, நொங்கெடுக்கிறார்.


இந்தியவரலாற்றில் என்ன வேறுபாடு? இங்குள்ள இஸ்லாம் அல்லாத பேரரசுகள் இஸ்லாமை கட்டுப்படுத்தி பேரழிவில் இருந்து இந்தியாவைக் காத்தன என்பதே. தங்குதடையிலா அதிகாரம் இஸ்லாமுக்கு எப்போதுமே கிடைத்ததில்லை. ராஜபுத்திரர்கள், அதன்பின் விஜயநகரம், அதன் பின் மராட்டியர்கள் என வலுவான எதிர்விசை எப்போதும் இருந்தது. எந்நிலையிலும் போர் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தது. ஆகவே சமரசம் மூலமே இஸ்லாமியர் ஆளமுடிந்தது. நேரடி ஆட்சி அமையவில்லை, கப்பம் கட்டும் நாடுகளின் தொகையாகவே இஸ்லாமிய ஆட்சி நீடிக்க முடிந்தது.

என்ன கொடுமை சார் இது? இதுவரை இந்திய வரலாற்றை ஆராய்ந்த எந்த ஆராய்ச்சியாளருமே இவ்வளவு நுட்பமான விஷயத்தை சொன்னதேயில்லையே?

அவுரங்கசீப் காலக்கட்டத்தில்தான் socalled இந்துஸ்தானம் என்று சொல்லப்படுகிற இந்தியா மிகப்பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்ததாக தவறாக இதுவரை நாம் வரலாற்றைப் புரிந்துக் கொண்டிருக்கிறோம். தங்குதடையில்லா அதிகாரம் இஸ்லாமுக்கு இங்கே கிடைக்காததால்தான் ஒருவேளை பல இந்திய சிற்றரசர்கள் அவர்களாகவே முன்வந்து இஸ்லாமை தழுவினார்களோ?

ராஜபுத்திரர்கள், விஜயநகரம், மராட்டியர்கள் எல்லாம் இஸ்லாமை இங்கிருந்து ஓட ஓட விரட்டியடித்ததாக இப்போதுதான் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களுக்கு எல்லாம் பயந்து, பணிந்து போய்தான் முகலாயர்களால் நூற்றாண்டுக்கால சாம்ராஜ்யத்தை இங்கே நிறுவமுடிந்தது என்பதையும் எழுத்தாளர் தனது ஞானமரபு தந்த உள்ளொளி தரிசனத்தால் உணர்ந்து நமக்கு எடுத்தியம்புகிறார்.

சொல்வது எழுத்தாளர் ஆயிற்றே? நாமும் நம்பிவிட்டு வாசகர் கடிதம் அனுப்புவோம். பாராட்டி பின்னூட்டம் போடுவோம்.

எழுத்தாளருக்கு அவரது வாசகர் அனுப்பியிருக்கும் நைஜீரிய படத்தைப் போன்று சில படங்களை, நமக்கும் நம் வாசகர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். அவற்றில் பல படங்களை இங்கே பிரசுரிக்கவே இயலாத வகையில் இருக்கின்றன. யாருக்காவது நேரம் நிறைய இருந்தால் Gujarat atrocity என்று டைப் செய்து கூகிளில் தேடி பார்க்கலாம். ஒரு சில படங்களை மட்டும் இங்கே பிரசுரிக்கிறோம்.

நைஜீரியாவுக்கும், இந்தியாவுக்கும் இந்த விஷயத்தில் என்ன வேறுபாடு என்று எழுத்தாளர் ரேஞ்சில் நாமும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். அங்கெல்லாம் இனக்குழுக்களின் மோதலில் இதுபோன்ற வன்முறைகள் நிகழும். இங்கே மோதலுக்கு காரணமாக இருப்பவரே அப்பகுதியினை ஆளக்கூடிய அதிகாரத்தில் இருப்பார். எதிர்குழு பெண்களின் யோனிகள் நம் குழு இளைஞர்களின் விந்துகளால் நிரம்பட்டும் என்று மேடையில் முழங்குவார்.






கனவில் விமானம் பிடித்து, நைஜீரியாவுக்குப் போய் மனிதநேயம் காட்டும் எழுத்தாளரே, கூரை ஏறிப் பாருங்கள் போதும். குஜராத் தெரியும்.



நன்றி:

No comments: