Wednesday, June 23, 2010

தந்தையின் தவிப்பு

தந்தையின் தவிப்பு


எனது அன்பு மகனே,,
அன்னையைமட்டும் அணைத்துகொள்கிறாய்,
இந்த தந்தையை ஏன் தள்ளிவைத்தே பார்க்கிறாய்!

ஈன்றெடுத்தவள் அன்னையென்றாலும் –அதில்
இந்த தந்தைக்கும் பங்குண்டல்லவா?

சினிமாக்களிலும் தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே பதியப்பட்டது!

சில சமயங்களில் என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு பாசமில்லை என்றாகுமா?

அன்னையும் தந்தையும் காட்டும் அளவுக்கு மீறிய
பாசத்தால் குழந்தை அல்லல்பட்டுவிடக்கூடாதே
”என்றுதான்” நான் சற்று என் பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!

அதை புரியாத நீ என்னை ஒரு
பூச்சாண்டியைப்போலவே பார்ப்பதைதான்
என்னால் பொருக்கமுடிவதில்லை!

விரோதியல்லடா உன் தந்தை! உன்னை
இவ்வுலகத்திற்கு வெளிச்சமாய் காட்ட
என்னை நான் மெழுகாக்கிக்கொண்டேன்,

உருகுவதற்காக வருந்தாது மெழுகு ”தன்”
உயிரைக்கொன்று திரியை வாழவைக்கும்
அதுபோல்தான் நான்!

மகனே நீ உயிர்வாழ உன் அன்னை தன்
உதிரத்தைபாலாக்கித்தந்தாள்,

நான் உனக்காக என் உயிரையே உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா. என் உணர்வுகளைப் புரிவாயா????

அன்புடன் மலிக்கா


No comments: