Wednesday, June 9, 2010

என்ன கவிஞன் நான்

அன்புடன் புகாரி


என்ன கவிஞன் நான்

இங்குதான் எனச்சொல்லி
என் சுட்டுவிரல் தொட்டுவிடாமல்
எங்கெங்கிலுமே
காட்டாறாய்ப் பிரவாகமெடுக்கும்
என் ஆத்மத் துடிப்புகளுக்குச்
சரியான வார்த்தை வடிகால்
தேடத் தெரியாமல்

என்ன கவிஞன் நான்

அறிவே
உள்ளே கனலும் என்
நெஞ்ச எரிமலை
மிகச் சத்தமாய் வெடிக்க
நித்தம் முடிவு வெல்லாத
ஆவேசச் சொற் குழம்புகளை
என்னுள் கொப்பளிக்கச் செய்

இல்லையேல்
வெறித்தனமாய் என்னுள்
எழுந்து எரியும்
அந்த ராட்சசத் துடிப்புகளையேனும்
அணுவளவும் மிச்சமின்றி
தீயச் செய்

No comments: