Wednesday, July 14, 2010

எங்கள் பிரதேச முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்குச் சொற்கள்

எங்கள் பிரதேச முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்குச் சொற்கள்
Author: ஃபஹீமாஜஹான்



யாழ்ப்பாணத்தவர்கள் தான் சரியாகத் தமிழைப் பேசுவதாக நினைத்துக் கொண்டிருப்பதைப்போலவே எங்கள் ஊர் மக்களும் தாங்கள் தான் சரியான தமிழைப்பேசுவதாக நினைத்து வெளியூர் மக்களின் தமிழை நையாண்டி செய்து கொண்டிருப்பவர்கள்.(எங்கள் பிரதேசம் எனும்போது வடமேல்மாகாணம், குருநாகல் மாவட்டம், இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில், ஹிரியால தேர்தல் தொகுதி மக்களையே குறிப்பிடுகிறேன்.)இதிலிருக்கும் முரண்நகை என்னவென்றால் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூழலில் வாழும் இம் மக்கள் பேசும் தமிழ் உச்சரிப்புக்கள் சரியான தமிழ் உச்சரிப்புக்களாக இருப்பதில்லை.(இந்த அழகில் தான் தமிழைச் சரியாகப் பேசுகிறோம் என்று மற்ற மக்களைப் பார்த்து நையாண்டி செய்கின்றனர்)

ர,ண,ள,ழ உச்சரிப்புகள் இவர்களது சொல்லகராதியில் இல்லை.

ஊர் மொழியில் இதனை எழுதினேன் என்றால் இதன்பிறகு எனது பெயரைப் பார்த்தாலே ஈழத்து முற்றத்திலுள்ளவர்கள் ஓடத்தொடங்கிவிடுவார்கள் என்பதால் சில சொற்களை மாத்திரம் தருகிறேன்.

ஒவ்வொரு சொற்களாகப் பார்ப்போம்.

1.என்ன? - என்த?, ஏத்த,? (* இந்தச் சொல்லையே வேறு பிரதேசங்களில் என்தேன்? என்னதேன்? ஏதேன்? எனா? என்றெல்லாம் கூறுவர்)

2. ஏன்? - ஏ? எய்யா?

3. நுளம்பு - நெலும்பு

4. மரம் - மறம்

5. மழை - மல

6.தேநீர்- தேத்தண்ணி (இதே சொல் கிழக்கில் "தேயில குடிப்பம்" )

7.அவர் உன்னை வரச் சொன்னார்- அவறு ஒன்ன வறட்டாம் - அவறு ஒன்ன வறச் சென்னார்

8.மறந்துவிட்டது - நெனவாத்துப் பெயித்து

9. ஆற்றில் குளிக்கப் போவோம்- ஆத்துக்கு முழுக பொம்.

10. எருமை மாடு - கிடாமாடு

இதற்கு மேல் எழுதினால் என்னிடமுள்ள கொஞ்சத் தமிழ் சொற்களும் ஆபத்தில் வீழ்ந்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

(கானா பிரபாவின் நீண்ட நாள் வேண்டுகோள் இன்று நிறைவேறுகிறது)  
நன்றி : http://eelamlife.blogspot.com/2010/07/blog-post_10.html

No comments: