Wednesday, May 11, 2011

பின்லேடன் மனைவிகளை அமெரிக்கா சந்திக்க பாக். அனுமதி

பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் வைத்து பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றதாக அறிவித்தையடுத்து, பாகிஸ்தான் அரசு தான் அவரை பாதுகாத்து வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  காரணம் பின்லேடனை தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடம்  ராணுவ பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ளதால் ராணுவத்திற்கு தெரியாமல் பின்லேடன் தங்கியிருக்க முடியாது என்ற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில்,  பின்லேடனின் மனைவிமார்கள் 3 பேரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது என்ற செய்தி வெளியானது.  எனவே, பாக்கிஸ்தான் பின்லேடனின் மறைவிடம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், கைது செய்து வைத்திருக்கும் அவரது மனைவிமார்களிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வலியுறுத்தியது.  இதற்கு ஆரம்பத்தில் மறுத்த பாகிஸ்தான், அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலால் இப்போது சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.


ஆனாலும், அவர்களிடம் பேட்டி மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் கேள்விகளை கேட்டு அவர்களை விசாரணை நடத்த அனுமதிக்க இயலாது எனவும் கூறியுள்ளது.   இவ்விசயத்தில் பாகிஸ்தானின் பிடிவாதம் தொடருமா அல்லது தளருமா என்பது விரைவில் தெரியவரலாம்
Source : http://www.inneram.com/2011051116395/pak-permitted-to-see-binledans-wifes

No comments: