Monday, October 3, 2011

உளத்தூய்மை உருவாக்கும் ஒற்றுமை

எண்ணத்தில் தூய்மை வேண்டும்
***** இதழ்களில் வாய்மை வேண்டும்
மண்ணைப்போல் பொறுமை காட்டு
***** மனத்தெழு யிச்சை யோட்டு
விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம்
***** வேற்றுமைத் தீயைப் போக்கும்
கண்ணுக்கி மைபோல் நட்பு
***** காத்திடும் கூட்ட மைப்பு

யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு)
விளம்+மா+தேமா (அரையடிக்கு)
என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
“கவியன்பன்” கலாம்
குறிப்பு:இப்பாடல் அண்மையில் (30/09/2011 அன்று) துபையில் நடாத்தப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதற்பொதுக்குழுக் கூட்டத்தில்
எனது (கல்லூரித்) தமிழாசிரியர் ஜனாப் அப்துல்காதிர்.M.A.M.Phil அவர்கள் முன்னிலையில் பாடினேன் என்ற மகிழ்ச்சியானச் செய்தியினை நினைவூட்டுகின்றேன்.

--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

MY SPEECH IN DUBAI கவியன்பன்” கலாம்

No comments: