Friday, January 13, 2012

தலைவாரிப் பூச்சூடி உன்னை...

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்?

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் - கேலி
பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!

கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்
கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு.

கடிதாய் இருக்குமிப் போது! - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!

கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு - பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

-பாரதிதாசன்

No comments: