Saturday, March 17, 2012

போகாதே! போய் விடாதே! ஏன் இந்த அவசரம்?

 யார் செய்த தவறு! காலமெல்லாம் உன் மீது நான் கொண்ட அன்பை மறந்து  என்னை விடுத்து மறைய உனக்கு இந்நிலையை உருவாக்கியது யார்?

 உன்னை வழியில் விளையாடவைத்து என் விழியில் வெப்பத்தினை தந்து எரிமலையாய்  நெருப்பினை கொட்டவைத்து  விட்டாயே!  இனி என்  விழிக்கு ஏது குளிர்ச்சி! அன்பே நீ அணையாதே! அவசரத்தில் நாம் இந்த உலகத்தில்  வந்ததால் வேகமாய்  நாம் நம் வாழ்வை விளையாடி விட்டோமோ!
 நில்! போகாதே! முடியாது யாராலும் நிறுத்த முடியாது . போவதற்குள்ள வழியை நாமே உருவாக்கி நாமே அதில் பயணம் செய்து விட்டோம்.

எதற்கும் பொறுமை தேவை ! இறப்பதற்கு வழி உண்டாக்கி வேதனை அடைவதால் இழந்ததை திரும்ப பெற முடியுமோ!
தனக்கு
த் தெரியாமல் தானே வரவைத்த தற்கொலையோ! 
விபத்தின் வழி மரணம் வேகமாக நம்மை வந்தடைய நாம் ஏன் அந்த நிலையை உருவாக்கிக்  கொள்கின்றோம்! அதனால் விளையும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் நாம் ஏன் தவிக்கின்றோம்!
 

No comments: