Thursday, April 26, 2012

சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா?

சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா?
தம்புள்ளையில் நடந்தது என்ன?

ஏப்ரல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை மாநகரில் பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2000 சிங்கள பௌத்தர்கள் மாபெரும் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.

“ரங்கிரி விகாரையை மையமாகக் கொண்ட தம்புள்ளைப் புனித பூமியில் ‘சட்டவிரோதமாக’ நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயில் மற்றும் ஹிந்துக் கோவில் என்பவற்றை இடித்துத் தகர்த்து, புனித பூமியைத் தூய்மைப்படுத்துவோம், சிங்கள பௌத்தத்தைக் காக்க அணி திரள்வோம், அந்நிய சக்திகளை வெளியேற்றுவோம்” எனும் எதிர்ப்புக் கோஷங்களை முழங்கியபடி பேரணியாளர்கள் முன்னேறிச் சென்றனர்.

இந்தப் பேரணி இடம்பெறுவதற்கு முதல் நாள் நள்ளிரவில் பள்ளிவாயிலை நோக்கிப் பெட்ரோல் குண்டு ஒன்று எறியப்பட்டிருந்தது. ஆனால், அதன் மூலம் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்தக் கலவரமான சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ரத்து செய்யப்பட்டது. தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். பேரணியாளர்கள் முஸ்லிம் பள்ளிவாயிலை இடித்துத் தகர்க்கும் நாசகாரப் பணியில் ஈடுபட்டபோது, காவல்துறையினரும் விசேட பாதுகாப்புப் படையினரும் தலையிட்டு, தம்புள்ளை கைரியா முஸ்லிம் பள்ளிவாயிலை மூடி “சீல்” வைத்தனர்.

வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த இனவாத பௌத்தர்கள் முன்னிலையில், ஒரு முன்னணி பௌத்தப் பிக்கு, “இதற்குப் பின் இந்தப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிமுக்கு சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில், பௌத்தப் புனிதப் பிரதேசம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கும் எந்த ஓர் இடத்திலும் வேறு எந்த ஒரு சமய வழிபாட்டுத்தலமும் இருக்கக்கூடாது. இந்த நாட்டின் சட்டமோ நாட்டின் அதிபரோ உடன்படாவிட்டாலும், நாம் இந்தச் சட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவோம்!” என்று துவேஷம் பொங்கும் குரலில் பிரகடனப்படுத்தியபோது, “சாது! சாது!” என்று கூட்டத்தினர் கத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சிப் பிரவாகத்தை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, இங்குள்ள காளி கோவிலுக்கு மேற்படிக் குழுவினரால் சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்து இந்தப் பேரணியைத் தலைமை தாங்கி நடாத்திய தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமைப் பிக்குவிடம் இப்பிரதேசவாசியான ஹிந்துப் பெண்மணி முறையிட்டபோது, “கூடிய விரைவில் இங்குள்ள ஹிந்துக் கோவில் முற்றாக உடைக்கப்படும். அதன் பின், நீங்கள் அனைவரும் இந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும்” என்று அவர் அப்பெண்மணியை  அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் 
சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா?

Source : http://www.inneram.com/

dambulla masjid attacked by buddhist ( BBC TAMIL )

No comments: