Monday, May 21, 2012

நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும்.

 நீர்வீழ்ச்சிகளை பார்ப்பதிலும் அங்கு குளிப்பதிலும் அனைவருக்கும் மிகுந்த ஆர்வம் இருக்கும் . ஒர் வாரத்திற்கு முன்பு கோனார் நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்தேன். அனைவருக்கும் மூனார் நீர்வீழ்ச்சி தெரிந்திருக்கும். கோனார் நீர்வீழ்ச்சி ஆந்திராவில் திருப்பதி அருகில் உள்ளது. ஒரே அருவிதான்.ஆனால் கோடையிலும் நீர் கொட்டுகின்றது .குளித்தவுடன் பசி . ஒரு விடுதியும் இல்லை .இந்த நிலை வராமல் இருக்க பிலிப்பைன்ஸ் குசான் மாகாணத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டே பசியைத் தீர்த்துக் கொள்ள அருவியின் அருகிலேயே அருமையான உணவு கிடைக்கும் விடுதி உள்ளது. நீர்வீழ்ச்சியில் குளிக்காதவர்களும் நீர்வீழ்ச்சியின் அழகை பார்த்துக் கொண்டே அந்த அருவியின் குளிர்ந்த நீர் நமது கால்களில் தவழ்ந்து ஓட நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும். 
படத்தினைப் பாருங்கள்
 by mail from 'musheer'
 



No comments: