Sunday, June 3, 2012

"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள் "

 அரபு நாட்டில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோதச் செயல்களும் ஆக்கிரமித்திருந்தது.   அரபு நாடுகளில்  பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவதும் அல்லது கொன்றுவிடும் பழக்கம் இருந்தபோது இறைவனால் இறக்கப்பட்ட வசனம் இவைகள்.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.- Qur'an 17:31 திருக்குர்ஆன்-17:31

எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை. - Qur'an 6:140 திருக்குர்ஆன்6:140

 இக் கொடிய பழக்கம் இன்னும் நம் தமிழ் நாட்டிலும் இருப்பதனைப்  பார்க்கின்றோம்.
இஸ்லாம் குழந்தை உண்டானபின் அதனை குடும்பக் கட்டுப்பாடு   என்ற பெயரில் குழந்தையை அழிப்பதனயும்  வன்மையாக கண்டிக்கின்றது. கரு உண்டானபின்பு குழந்தையின் தாய்க்கோ அல்லது   குழந்தையின் உயிருக்கோ ஆபத்து வரும் நிலை உண்டாகும் போது சில விதிவிலக்கு இருக்க முடியும். குழந்தை உண்டாவதற்கு முன் சில தடுப்பு முறை கையாள்வதில் உண்டாகிக் கொள்ளும் குடும்பக் கட்டுப்பாடு தவறல்ல. (இந்திரியத்தினை உள் செல்ல விடாமல் தடுத்துக் கொள்வது)    அது தாயின் உடல்நலம் கருதியாக இருக்கலாம்.
ஆனால் தேவைக்கு பயந்து அதாவது அதிக குழந்தைப் பிறந்தால் கவனிக்க முடியாது என்ற பயத்துடன் குழந்தையைப் பெற வேண்டாம் என்று முடிவுக்கு வருவது மிகவும் பெரிய தவறு.

" நீங்கள் விரும்புகின்ற ஒன்றின்  மூலம் தீங்குகள் இருக்கக்  கூடும்  நீங்கள் வெருப்பவைகளின்  மூலம் உங்களுக்கு    நன்மைகள்  இருக்கக் கூடும்" இது இறைவனின் சொல்.

தமிழில்  தர்ஜமதுல் குர்ஆனை    முதன்   முதலில் மொழி பெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி  அவர்கள் ,ஆ.கா. . அப்துஸ் சமது  அவர்களின் தந்தைதான்  அவர்கள் .
ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களிடம் ஒருவர் சென்று கர்பத்தடையைப்  பற்றி தங்களது கருத்து என்ன  என்று கேட்டாராராம் . அதற்கு மதிப்புக்குரிய பாகவி அவர்கள் இந்த கேள்வியை உன் தகப்பனார் கேட்டிருக்க வேணும் என்று சொன்னார்களாம் . இதன் பொருள் உன் தந்தை கர்பத்தடையை செய்திருந்தால் இந்த கேள்வி கேட்க இந்த உலகத்திற்க்கே நீ வந்திருக்க மாட்டாய் என்பதுதான் . யோசனை செய்யுங்கள். நம் தகப்பனாரும்  இதை செய்திருந்தால் நாமும் வந்திருக்க மாட்டோம்

மக்கள் தொகை ஒரு நாட்டுக்கே பெரிய பலம். ஒரு நேரத்தில் சிங்கப்பூர்  பிரதமராக இருந்த லி குவான் யூ  குடும்பக் கட்டுப்பாட்டை  ஆதரித்தார். அதன் விளைவு  நாட்டின் மக்கட் தொகை குறைந்து நாட்டின் வளர்ச்சி குறைய ஆரம்பித்ததை  கண்ட பின் மக்களிடம் முடிந்த அளவில் அதிகமாக  குழந்தையை அதிகமாக பெறுங்கள்  என வேண்டிக் கொண்டார்.
இறைவன் நினைத்தால் ஒரே நேரத்தில் மக்கட் சமுதாயமே அழிந்துவிடும். ஒரு பெரிய அலை வீசினாலே சுனாமி வந்து விடுமோ ஏன்று பயப்படுகின்றோம். இன்னும் எதனையோ அழிவுகளை நாம் பார்க்கின்றோம்.

ஒன்று அல்லது இரண்டு குழந்தை இருக்கும்போது அதற்கு ஒரு உடற்கோளாறு  வந்தால் பயம் நம்மை வந்தடைகின்றது. காரணம் ஒன்று அல்லது இரண்டு  குழந்தைகள் பெற்றவர்களுக்கு ஒரு தெளிவு வருவதில்லை..குழந்தைகள் குறைவாக இருக்கும் போது உழைப்பிலும் குறைவு வருகின்றது. ஒன்று அல்லது இரண்டு  குழந்தை பெற்றவர்களை  விட அதிக குழந்தைகள் பெற்றவர்கள்  சிறப்பாக வாழ்கின்றாகள். அந்த குடும்பத்திற்கு பெரிய குடும்ப உறவும் உண்டாகி மகிழ்வாக இருக்கின்றனர்.
எங்கள் ஊரில் நிறைய குழந்தைகள் பெற்றவர்கள்தான் பெரிய செல்வந்தர்கள். நாம் நினைப்பது நம் திறமையால்தான் அனைத்தும்  கிடைகின்றன என்பது ஒரு மாயை .இறைவன் உதவியும் அதற்கு அவசியமாகின்றது.நம் திறமை ஒரு பகுதிதான்.

தேவைக்கு பயந்து குழந்தையை கொள்ளாதீர்கள்.மக்கள் தொகை பெருக்கத்தினால் நன்மையே விளைந்திருகின்றது 


சரியான பராமரிப்புடன்   குழந்தைகளை வளர்ப்பது  பெற்றோர்களது  முதன்மையான  கடமையாக  உள்ளது. ஆனால்   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் ஆண் மற்றும் பெண் என வேறுபடுத்தக்  கூடாது. எனினும், உண்மையில்  சமூகங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனையானயாக உள்ளது.ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்   பெற்றோர்கள் ஒரு சார்புள்ளவர்களாக  இருக்க உரிமை இருந்தால், விரும்பினால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். பெண் பெருமை பேசுவோம் நம் பெருமை குலையும் என்றால் பெண்ணையே அழிப்போம்.
  
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு உள்ள ஒரு விஷயம் அல்ல என்று சொல்கிறார்கள்  பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்களாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள்  மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர்  நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.
 
"ஒரு ஏழை பெண் தனது இரண்டு மகள்கள் சேர்ந்து என்னிடம் வந்தார்கள் . நான் அந்த தாயிடம்  மூன்று பேரித்தம் பழங்கள்  கொடுத்தேன். அத்தாய்   தனது இரண்டு பெண்ணுக்கும் ஒவ்வொரு பேரித்தம்  கொடுத்தாள் பிறகு அவள் தான் ஒன்று  எடுத்து  சாப்பிட தன் வாயில் போட முயலும் போது , அவரது மகள்கள் அதை சாப்பிட  தங்களது ஆசையை வெளிப்படுத்தினார்கள் . உடனே அத்தாய்  தான் உண்ண இருந்த அந்த பேரித்தம் பழத்தினையும் பிரித்து தன் பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தாள், கொடுத்த பாங்கும் நோக்கமும் தனக்கு மிகவும் கவர்ந்தது" என அன்னை ஆயிஷா தெரிவிக்கின்றார்கள். இதுதான் பெண்ணின் பெருமை.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்"


"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல
மாதர றிவைக் கெடுத்தார்.
கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடுங் காணீர்".
பாரதியாரின் பாடிய மறக்க முடியாத  வரிகள்
      ” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:
   இது தவிர ஒரு பெண் கரு கலைப்பு  சமூகங்களில் இருந்து வருகிறது அதுவும்  தாய்மார்கள் (அவர்களே பெண்ணாக இருந்து)இதனை செய்வது கொடுமை. பெண்ணை வளர்ப்பதும் பாதுகாப்பதும் திருமணம் சுமையாக வந்து சேரும் என்ற தவறான எண்ணம் கொண்டு இவ்வித முடிவுக்கு வருகின்றனர். தேவைக்கு பயந்து குழந்தைகளை கொள்ளாதீர்கள் அவர்களுக்கு தேவையானதை இறைவன் அளிப்பான். இளவயதிலேயே திருமணம், கணவர்கள் மூலம் சித்திரவதை,  மாமியார் கொடுமை படுத்துவது, நாத்தனாரின் அலட்சியப் போக்கும், கிண்டலும் இவைகள் பெண்ணாக இருந்து பெண்ணுக்கு இழைக்கப் படும் தீமைகளாக இருபதனைக் காண்கிறோம்.

No comments: