Friday, July 6, 2012

மன[ழை]க்காலம்!

மன[ழை]க்காலம்!:

மழைக்கால நேரத்தில்
மதிமயக்கும் தாகத்தில்
இதமான தருணத்தில்
இன்னிசை பாடிவரும்
இளஞ்சூடான மழைத்துளிக்குள்
குடையில்லாமல் நனைகிறேன்
குதூகளித்து மகிழ்கிறேன்
மகிழும் வேளையில்
மனதுக்குள்ளும் கேட்கிறது
மழை சத்தமும்
மன்னவன் கொடுத்த முத்தமும்!

-----------------------------------------------------------------
மழையே மழையே வானின் மழையே!
மயில் தேவையுமறியும் மேகமழையே!

உன் வருகையில்லா இடங்களுமுண்டோ!
உன் துளிகள் தொடதா தளிர்களுமுண்டோ!
உன் வரவால் வாசம் மண்மேல் வீசும்!
உன் சாரல் துளியில் தேகமும் கூசும்!
நீ அளவாய் வந்தால் இந்த உலகம் செழிக்கும்!
உன்வரவு அதிகப்படியானால் உயிர்கள் தவிக்கும்!

வயலிடுக்கில் நுழைந்து பயிர் செழிக்க வைப்பாய்!
வறட்ச்சி கண்ட நிலத்தில் வழிந்தோடி களிப்பாய்!
வானிலிறங்கிவந்து வசந்தம் தந்து போவாய்!
வரவதிகமாகி வதை செய்து வதைப்பாய்!
வரவு தரமாலிருந்தும் பஞ்சம் தந்து பார்ப்பாய்!
இயற்கைகளை உன்னால் உயிர்வாழச்செய்வாய்!
இறைகட்டளையை நீயும் மீறிடாது நடப்பாய்!
காதல் மழையாய் மனங்குளிர செய்வாய்!
செல்ல மழையாய் சிணுங்கி ரசிக்க வைப்பாய்!
குழந்தை மழையாய் கொஞ்சி சிரிக்க வைப்பாய்!

உன்னைப் பாடாத கவிஞருமுண்டோ
உன்னைப் தேடாத மனங்களுமுண்டோ!
உன்னைப் தீண்டாத தேகமுமுண்டோ!
உன் வரவால் இந்த பூமியும் பூக்கும்
உன் செலவால் இந்த பூமியில் அழியும்!
செழிப்பைத் தந்து வன[த்தை]ப்பை காப்பாய்
செல்லமாகவே தூவி மனிதத்துயரம் துடைப்பாய்..
-------------------------------------------------------------------------------------------

எல்லாம் அவன் செயல்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 Source : http://niroodai.blogspot.in/2012/07/blog-post_06.html
-----------------------------------------------------------------------------------------------------

"Let it Rain ..More&More....& More."

No comments: