Wednesday, November 21, 2012

யார் ஆட்சி செய்தால் நமக்கு என்ன!

 சந்தைக்கு பொருள் அதிகம் வந்தால் பொருட்களின் விலை குறையும்
தேவை அதிகரித்து பொருள் கிடைப்பது தட்டுப்பாடானால் விலை ஏறும் – இது நியதி
இப்பொழுது நிலையில் அந்த நியதியில் மாற்றம் காணப்படுகின்றது. உற்பத்தி நிலையின் அதிநவீன மாறுபாடடின் காரணத்தினால் பல பொருட்கள் சந்தையில் பொருட்கள் நிறைந்து கிடைக்கின்றன (அந்நிய கம்பனிகளால் தயாரிக்கப் படும் பொருட்கள்–செல்போன்,கார் மற்றும் பல ) ஆனால் விலை அதிமாகிக்கொண்டே வருகின்றது . சந்தைக்கு பொருள் அதிகம் வந்தாலும் பொருட்களின் விலை குறையவில்லை. இது ஒரு நிலை.

தேவை அதிகரித்து பொருள் கிடைப்பது தட்டுப்பாட்டினால் விலை ஏறும்.
 பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு காரணமாக விலை ஏற்றம். நடுத்தர மக்கள் நிலை திண்டாட்டம்
டாலர் வீழ்ச்சியாலும் பொது மக்கள் நிலை தடுமாற்றம் அந்நிய நாட்டு முதல் போடும் கம்பனிகளால் உள்நாட்டு சிறு தொழில்கள் அழியும் நிலை . அனுமதி கொடுக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு குறிப்பாக அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விற்பதில் மக்களுக்கு மின்சார தட்டுப்பாடு அதிகமாகி மக்கள் அவதியடைகின்றனர்
அதற்கு காரணம் அரசுக்கு வருமானம் கிடைக்கின்றது அவர்கள் வேலை செய்பவர்களுக்கும் உயர்ந்த ஊதியம் தருகின்றனர் மற்றும் அதிக லாபம் வைத்து விற்கின்றனர். வேலை செய்ய வருபவர்கள் அதிக ஊதியம் எதிர்பார்பதால் வேலைக்கும் ஆள் கிடைபதில்லை. பலர் அயல் நாடு சென்று வேலை தேடிக்கொண்டனர்.
இங்குள்ளோருக்கு இனாம் பொருட்கள் மற்றும் இனாம் பணங்கள் கிடைக்க வாய்புள்ளது அதனால் வேலை தேடுவதும் குறைத்து விட்டது . ஆனால் மாநிலம் விட்டு மாநிலம் போய் அதிக சம்பளத்தில் வேலை செய்கின்றனர் .தமிழ்நாட்டு மக்கள் கேரளாவுக்கும் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கும் இப்படி ஒரு மாற்றம்.

ஓர் இந்தியா அனைவரும் இந்திய குடிமக்கள் என்ற கொள்கையில் சிலர் மாறுபாடான வகையில் செயல்படுகின்றனர். குஜராத் மற்றும் மும்பை மாநிலத்தில் உள்ளோர் சிலர் பீகார் மக்கள் இங்கு வந்து வேலை செய்யக் கூடாது என தடை போடுகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரு கட்சி வந்தால் ஒரு திட்டம் போடுகின்றது. அடுத்த ஆட்சி வேறு கட்சி வசம் வந்து விட்டால் முந்தைய ஆட்சியின் திட்டங்களும் நடைபெற்று வந்த கட்டுமான வேலைகளும் தொடரப்படாமல் விடப்படுகின்றன.
யார் ஆட்சி செய்தால் நமக்கு என்ன! நாம் அதனால் பயன் பெட்றோமா! என்ற அலட்சியப் போக்கும் சுயநல மனநிலையும் மக்கள் மனதில் நிலைத்து விட்டது.
திட்டம் போடும் கட்சி போக வரும் கட்சி அந்த திட்டத்தை கைவிட மற்றும்  வேறு திட்டம் வகுக்க  மக்கள் வரிப்பணம் வீனடைய மக்கள் பாடு திண்டாட்டமாக அமைகின்றது .
நாடு பாதுகாப்பு கொடுத்தால் மட்டும் போதாது .மக்களுக்கு நன்மை செய்யக் கூ டிய அரசாகவும் இருக்க வேண்டும் . ஐந்து வருடம் நம் ஆட்சிதான் என்ற மனப்பக்குவம் போகி போலீஸ் ஆட்சியாக இல்லாமல் வரும் காலத்தை சிந்தித்து செயல்பட வேண்டும்.

No comments: