Thursday, December 13, 2012

பூக்காரி பூ சுமந்த கூடையில் மணமிருக்கும்

யாப்பிலக்கணம் அறியேன்
எழுத்துப்பிழை அறியேன்
நினைத்ததை எழுதுவேன்
எழுதியதை கிழிக்க முயல்வேன்
கிழிக்காமல் கொட்ட இடம் தேடுவேன்
பூக்காரி பூ சுமந்த கூடையில் மணமிருக்கும்
பூக்கட்டிய நாரிலும் மணமிருக்கும்
 புகாரியோடு நட்பைக் கொண்டால் கவிதை வரும்
வந்த கவிதை பிழையோடு   வரலாம்
ஆசிரியர் உடனில்லை  அதை திருத்த
அதற்காக  நினைத்ததை நிறுத்த மனமில்லை
 நினைத்ததை நிருத்தாமல் முடித்து விட்டேன்
எழுதியது கவிதையுமல்ல கதையுமல்ல
இருப்பினும் மனதில் மகிழ்வோ ஏராளம்!

தவறு அறிய முடிந்தாலும்
தவறிய இடம் தெரியவில்லை
எழுதியதை கிழிக்க முயல்வேன்
கிழிக்காமல் கொட்ட இடம் தேடுவேன்
தேடிய இடம் கிடைத்தது
பலர் குப்பையை கொட்டுமிடம்
பலரும்  அறிந்த இடமாம்
பெயரும் உண்டாம் அதற்கு
பொருள் அறியாமல் தமிழில் சொல்ல முடியும்
ஃபேஸ்புக்காம் அந்த குப்பைத் தொட்டிப் பெயர்

உணர்ச்சி கொப்பளிக்கின்றது
உண்மை நாணய மற்றோரால் மறைக்கப் படுகின்றது
நீரினுள் ஒளியாது காற்று
உண்மை அறிவிக்க துடிக்கும் உள்ளம் 
உயர்ந்தோர் உள்ளவரை உண்மை உலகில் அறியப்படும் 
மனமே உன் கடமை செய்
நாடியோர் மனதில் நிறுத்தி வை
செய்வதை செய்த பின் விளைவுகளை சிந்திக்காதே
இறைவன் இருக்க முடிவை அவனிடத்தில் விட்டு விடு

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உவகை அடைய
உண்மை பேசுவோர் மனம் உடைந்து போக
சேவையாற்றும் மனதோடு திறவுகோல் உன்னிடம்
ஆற்றல் கொடுக்கும் அருள் இறைவனிடம்
தொடர் தொய்வில்லாமல்  தொடர் உன் சேவையை
வேடத்தை கையில் எடுத்தோர் வீழ்வர்
வேதத்தை மனதில் பதித்தோர் மாட்சி பெறுவர்

No comments: