Monday, December 31, 2012

உன் கேள்விக்கு என்ன பதில்!

இறை நூல் கற்றேன் இறையருள் பெற
இறை நூல் கற்றதால் ஈன்றோர் மகிழ்ந்தனர்
இறை நூல் நெஞ்சத்தில் பதிந்தது
நெஞ்சத்தில் பதிந்த இறை நூல் வாழ்வில் வழி காட்ட
நெஞ்சத்தில் பதிந்தது நாளாக இருள் நெஞ்சில் மறைந்தது
காட்டிய வழி வாழாமல் தோன்றிய வழியில்  தொடர்ந்தேன்

பொருள் நாடி வெளிநாடு சென்றேன்
குடும்பம்   நாடி வீடு திரும்பினேன்
என்ன பொருள் பெட்டிக்குள்  யெனப்  பார்த்தனர்
இல்லாள் நகையை  பெட்டிக்குள் தேடுகிறாள்
இல்லாததை  இருக்குமென தேடுகிறாள்
இருந்த புன்னகையும் மறைந்தது

இருக்கும் போது பலர் பல கேள்வி கேட்டனர்
வேலை தேடினால் என்ன படிப்பு ?என்ன அனுபவம்?
கேள்வி மேல் கேள்வி அத்தனைக்கும் பதில் தெரிந்தது
கேள்வியும் பதிலும் வாழ்வானது!

இறப்பு எனைத் தழுவ இருந்தோர் கேட்டது பல!
இறந்தவன் என்ன விட்டுச் சென்றான்?

சேர்த்தது எத்தனையோ!
சேர்க்க வேண்டியதை சேர்க்கவில்லை

உன்னருள் நாடி நிற்கின்றேன்
உன் வலிமையறிந்து நடுங்குகின்றேன்

மறை கற்றேன் மறை வாழ்வு வாழவில்லை
இறை கேட்கும் கேள்விக்கு விடையில்லை

அத்தனை கேள்விக்கும் பதில் அறிந்திருந்த நான்
இந்த கேள்வி எப்படி வரும் என அறிந்தேனில்லை!
இறைவன் கேட்டது ஒரே கேள்வி!
இருந்தவரை உனக்காக எத்தனை நன்மைகள் அனுப்பி வைத்தாய்?
இறைவன் கேட்ட கேள்விக்கு பதிலில்லை!
இனியொரு வாழ்வுமில்லை.
இழந்தது இழந்ததுதான்.

No comments: