Thursday, December 13, 2012

ஒற்றுமை வேண்டி கொள்கையை இணைப்பதில்லை

வந்தாரை வரவேற்றேன்
வந்தார் வேண்டாத வேலை செய்வார்
வேண்டியதையும் விரும்பித் தருவார்
வேண்டாததையும்  வெதும்பத் தருவார்
அள்ளித் தருவது அளவோடு இருக்கும்
அள்ளிப் போவது அதிகமாக இருக்கும்

எம்மிடத்தில் எப்போதும் இரு
இருக்கும்வரை தொல்லை தராமல் இரு

இத்தனை நாட்கள்  என்னோடு இருந்தாயே
இன்னுமா என் இதயத்தில் இடம் பிடிக்காமல் இருந்தாய்
நீ விரும்பியதை நான் அறிந்திருக்க
நான் விரும்பியதை நீ அறியாமல் போனதேன்

உனக்கொரு கொள்கை எனக்கொரு கொள்கை
ஒற்றுமை வேண்டி கொள்கையை இணைப்பதில்லை
கொள்கையின் அடிப்படையில் நாம் சேரவில்லை
தேவையின் அடிப்படையில் நாம் சேர்ந்தோம்
உன் கொள்கை உன்னோடு
என் கொள்கை என்னோடு
இக் கொள்கை நம்மை இணைத்தது

ஒற்றுமையாய் இருக்க அவரவர் கொள்கையை மதித்தல் வேண்டும்
வேற்றுமை விரும்பின் விட்டுக் கொடுக்கும் மாண்பு மறைந்து விடும்

நெருப்போடு நீர் சேர்ந்தால் நெருப்புதான் அனையும்
என்னோடு நீ மோதினால் நீ அழிவாய்
நான் நீர், நீ நெருப்பு
நெருப்பின்றி வாழலாம் நீரின்றி வாழ முடியுமோ

 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”- குர் ஆன்: 109:6.

No comments: