Saturday, January 12, 2013

வேண்டாதவர் இருந்தால் விவசாயம் செய்ய இடம் கொடு!

விவசாயம் செய்ய அப்பா விட்டுப் போன நிலமிருக்கு
விவசாயம் செய்ய ஆசையிருக்கு
விவசாயம் செய்ய பணமிருக்கு
விவசாயத்திற்கு வேண்டிய விதையிருக்கு

விவசாயம் செய்தால் நீர் வேண்டும்
விவசாயம் செய்து கிடைத்த நெற்களை விற்க வேண்டும்
விவசாயம் செய்தால் வேலிதான் மிஞ்சுமாம்
விவசாயம் செய்வதை விட்டு மனையாக்கி விற்றால் பணம் கிடைக்குமாம்

வேண்டாதவர் இருந்தால் விவசாயம் செய்ய இடம் கொடு
வேண்டாதவர் விவசாயம் செய்து பணத்தை விடுவார்
வேதனையடைந்து மனம் நோவார்
வேதனை வேண்டாம் அரசைக் கேள் பணம் தருவார் எனத் தப்பித்துவிடு

விவசாயம் செய்ய விட்ட நிலத்தை வாங்க நீதிமன்றம் அலைய வேண்டும்
விவசாயம் செய்ய விட்ட நிலத்தை விலை கொடுத்து நாம் வாங்க வேண்டும்
விவசாயமும் வேண்டாம் வேண்டாத தொல்லையும் வேண்டாம்
விவசாய நிலத்தை பல மனையாக்கி விற்று பணம் சேர்ப்போம்

No comments: