Sunday, April 21, 2013

உரக்க கதறிய ஒலி ஓயும்

உரக்க கதறிய ஒலி ஓயும்
உயர்ந்த வரிகள் உயர்வைத் தரும்

எழுதுகோல் மையற்றுப் போனது
எழுற்சி தரும்  வரிகள் வந்து விழவில்ல

வானம் மேகமற்றுப் போனது
மழை பொழியா பூமி வறண்டுப் போனது

மனதில் எழுற்சி வர வரிகள் நிறைய வேண்டும்
மழைகள் கொட்ட பூமி செழிக்கும்

உணர்ச்சியின் உந்துதல் சப்தத்தை கிளப்பின
உணர்ச்சியும்  ஓசையும் அடங்கிப் போயின

இடிகளின் முழக்கம் பயனளிக்கவில்லை
உரத்த குரல் பயனற்றுப் போகும்

வரிகளின் வேகம் நிலைத்து நிற்கும்
மனதின் வேகமும் தொடர்ந்து செயல்படும்

No comments: