Wednesday, June 19, 2013

தாய்மார்களின் கூச்சல் தாங்க முடியவில்லை !

'அய்யையோ !' என்ற மனைவியின்  அலறல் கேட்டு கணவன் கத்துகிறார்
'ஏன் இப்படி கத்துகிறாய்' என்று
இங்கே வந்து பாருங்கள் உங்கள் பிள்ளைகள் ( அப்பவும் நம்ம பிள்ளைகள் என்ற வார்த்தை வருவதில்லை) பண்ற அநியாயத்தை ! என்று கதறுகிறாள்
( அரசியல் குற்றவியல் சட்டப் பிரிவு தண்டிக்கப் படும் குற்றத்தைப் போல் )
கணவன்  மனைவியின்  அலறல் கேட்டு ஓடி வந்து பார்த்து
'இதற்கா இவ்வளவு கூக்குரல்' என மனைவியை கண்டிக்கிறார்
'ஆமா உங்களுக்கு என்னைத்தான் கண்டிக்கத் தெரியும். பெத்தவளுக்குத்தானே பிள்ளையின் அருமைத் தெரியும் ' என்று முனங்கிக் கொண்டு பிள்ளைகளை கண்டிக்கிறாள் தாய் .

அப்படி என்னதான் குழந்தைகள் குற்றம் செய்து விட்டார்கள்!
படங்களைப் பாருங்கள்