Sunday, September 15, 2013

சந்தேகம் ஒரு பக்கம் வீசும் காற்றா!

அன்பே! என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்

ஒன்றுமில்லை ஆறுயிரே !

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் எனைவிடுத்து நான் வரும்போதெல்லாம் லாப்டாப்பில்தானே உலா வருகிறாய்

'ஓ' நீங்கள் வேறு ஏதோ மனதில் கொண்டு பேசுவதென்ன!

நான் என்ன அவ்வளவு அறியாதவனா ! உன்னை பல நாட்களாக பார்க்கிறேன் . உன் செயல்பாடை, உன்னை சிறு வயதிலிருந்து நான் அறிவேன் . நீ லாப்டாப்பில்தானே எந்த நேரமும் மூழ்கிக் கிடக்கிறாய்!

நான் பார்க்கும் தொழில் சம்பந்தமாக சிலவற்றை தேடியே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளேன் என்று நான் உங்களிடம் பல முறை சொல்லியுள்ளேன்

இல்லை! நான் நீ செய்வதை பார்க்க வேண்டும்.

நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இத்தனை காலங்கள் நீங்கள் காட்டிய காதலும் ,பாசமும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் எவ்வாறு மறைந்து போனது

அன்பே!எனது பிரியமானவளே! உன் மீது நான் கொண்ட காதலும் ,பாசமும் உயர்வானது . வருத்தம் கொள்ளாதே. நான் வரும்போது உன் நினைவோடிருக்க நீ மற்றொன்றில் கவனம் செலுத்துவது என் மனம் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கிறது

சரி! நீ போடும் உன் அருமையான காப்பியை கொண்டு வா! அதனை பருகிக் கொண்டே நாம் இருவரும் சேர்ந்து தொலைக்காட்சியைப் பார்ப்போம். எனக்காக இதை நீ செய்ய முடியுமா!

இனிய வார்த்தைகளால் என்னை மயக்கி விடுகிறீர்கள் . உங்களுக்காக எதையும் செய்வேன். என் கடமையையும் நிறுத்தி வைப்பேன்!

இந்த இனிய காலங்கள் நினைவோடு நின்றன .
நிகழும் காலங்கள் மாறிப் போயின.

உடன் படித்த கல்லூரி மாணவி வெளி நாட்டிலிருந்து எங்கள் ஊர் வந்தாள்.அவளை ஊர் சுற்றிக் காண்பித்து சில நாட்கள் கழித்து அவள் இருக்கும் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றாள். அவள் இருக்கும்போது அவளிடம் நேசமாகவே பழகினாள்.

வெளி நாட்டிலிருந்து வந்தவள் தன் நாட்டிலிருந்து ஒரு முறை தான் நலமாக போய் சேர்ந்ததற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாள் . அன்றிலிருந்து என் மனைவி மனநிலையில் ஒரு மாற்றம் மற்றும் என் மீது ஒரு சந்தேகம் !

No comments: