Friday, October 18, 2013

புரோட்டா

நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!
தலைப்புத் தந்தவர்:
ஆரீஸ் முகம்மது - வடகரை (மாயவரம்) 

நன்றி : http://itzyasa.blogspot.in/
என் பக்கம்

 கவிதைக்குச் சொந்தக்காரர்யாசர் அரஃபாத்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்விற்கு டா டா என்று - உண்மை...