Wednesday, October 9, 2013

யார் யார் எத்தனை சதவிகிதம்?

ஒரு மார்க்கத்தில் (மதத்தில்)

1. மார்க்கத்தின் அடிப்படையோடு இயைந்து எவருக்கும் தீங்கின்றி அமைதியாக வாழ்பவர்கள்.

2. மார்க்கத்தின் பெயரால் அறியாமையில் உள்ளவர்களை பயன்படுத்தி புகழ், பொருள், அதிகாரம் பெற்று ஊரை நாட்டை உலகை நாசம் செய்பவர்கள்

3. அறிந்துகொள்ளும் எண்ணமே இல்லாமல் அறியாமையில் இருக்கும் மக்கள். பயம் காரணமாக எதையும் நம்புவார்கள்.

4. மதத்தைக் கண்மூடித்தனமாகக் கண்டு தவறான அழிவுத் திசையில் வெறிபிடித்து அலையும் அடிப்படைவாதிகள்

5. எனக்கு மார்க்கம் பிறப்பால் வந்தது. மற்றபடி எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று நாட்டின் சட்ட ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.

இவர்களுள் யார் யார் எத்தனை சதவிகிதம் என்று எவராவது கூறமுடியுமா?

by  அன்புடன்புகாரி
நன்றி http://anbudanbuhari.blogspot.in

No comments: