Thursday, November 14, 2013

பள்ளிக் கூடங்கள் பிஞ்சு பிள்ளைகளின் நெஞ்சில் வெம்மையை வெறுப்பை வளர்க்கும் பணியை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.


'சமத்துவத்தை வளர்க்க வேண்டிய பள்ளிக் கூடங்கள் பிஞ்சு பிள்ளைகளின் நெஞ்சில் வெம்மையை வெறுப்பை வளர்க்கும் பணியை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.பள்ளிக்கூடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள பொருட்கள் வாங்குவதற்கு போதுமான பணம் ஏழைக் குழந்தைகளின் பெற்றோரிடம் இல்லை. அதனால் அந்தக் குழந்தைகளால் போட்டிகளில் கலந்துகொள்ளவோ வெற்றி பெறவோ பரிசு பெறவோ முடியாமல் போய் விடுகிறது.வசதி உள்ளவர் வீட்டு பிள்ளைகளே வழக்கம்போல் பரிசுகளை " தட்டி "ச்செல்கின்றன. இன்னும் சில பள்ளிகளில் சில நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆடைதான் அணிந்து வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவர்களே ஆடையும் கொடுக்கிறார்கள். விலை ஆயிரம் இரண்டாயிரம். ஏழைகள் எங்கே போவார்கள் ? இப்படியெல்லாம் நடக்கும் கொடூரக் கொள்ளைகளை நினைத்து குடல் நடுங்கிக் கிடக்கும் ஏழைகளுக்கு மழலையர் தினமோ...மாணவர் தினமோ எதுவாக இருந்தாலும் அவை சந்தோஷத்தைத் தருவதில்லை.. சங்கடத்தைத்தான் தருகின்றன.'
Abu Haashima Vaver

'இந்த ஆடைதான் அணிந்து வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி அனால் அவர்கள் அந்த ஆடை கொடுக்கவில்லை .இந்த கட்டாயப் போக்கு பிடிக்கவில்லை அதனால் எனது பேரனை அவன் தகப்பனார் (எனது மகன் ) அழைத்துப் போகவில்லை . பள்ளி ஆடம்பரங்களின் இடமாக மாறி விட்டது . நான் அரசு பள்ளியில் தான் படித்தேன் ஏழை பிள்ளைகளோடு சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது .நன்றாகவே படித்தேன் நல்ல அறிவும் கிடைத்து நல்ல நிலைக்கும் வந்தேன் மற்றும் அதனால் இன்றும் மனதில் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கம் உள்ளது .சாதாரண பள்ளியில் நன்கு படிக்கும் வாய்ப்பு அக்காலத்தில் பரவலாக இருந்தது .இப்பொழுது கல்வி ஒரு தொழிற்சாலையாக மாறி விட்டது'
Mohamed Ali

'ரொம்பவும் சிறிய வயது குழந்தைக்கு வெற்றி பெறவேண்டும் எனில் உயர்ந்த ஆடை அணியவேண்டும் என்ற எண்ணத்தை மழலையர் பள்ளிகளிலேயே செயல்படுத்துவது தவிர்க்கபடவேண்டும். குழந்தைகள் அவர்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த உடையணிய வேண்டும் என்று மூளை சலவை செய்வதைபோன்று கொடுமையாக இருக்கிறது.'
Mohamed Marzuk

No comments: