Tuesday, November 26, 2013

எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரச்சார சி.டி அறிமுகம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரச்சார சி.டி அறிமுகம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  இதில் பங்கேற்றுப் பேசிய நடிகை அனுஷ்கா பேசும்போது,

"சினிமா காட்சிகளால்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாகி, எய்ட்ஸ் நோயாளிகள் பெருகுகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். எச்.ஐ.வி. பாதிப்பு என்பது அவரவர் நடத்தையைப் பொறுத்தது. சினிமாவில் எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்பான கதைகள் வராததற்கு எனக்கு காரணம் தெரியாது. திருமணத்துக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக எழுந்துள்ளது. அந்தளவுக்கு நம் நாட்டில் நிலைமை மோசமாகவில்லை" என்று நடிகை அனுஷ்கா தெரிவித்தார்.


 "எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமானது. இதுகுறித்து பள்ளிப் பருவம் முதலே அனைவருக்கும் பயிற்றுவிக்கப் பட வேண்டும். இதற்கு பள்ளிகளில் பாலியல் கல்வியைப் பயிற்றுவிப்பதோடு, பெற்றோர்களும் இதுபற்றி குழந்தைகளிடம் போதிக்கவேண்டும்." என்றும் அனுஷ்கா தெரிவித்தார்.

உலகில் எய்ட்ஸ் நோய் பரவுவதற்கும் சினிமாவில் காட்டப்படும் ஆபாசக் காட்சிகளுக்கும் தொடர்புண்டு என்ற குற்றச் சாட்டை நடிகை அனுஷ்கா மறுத்துள்ளார்.
Source : http://www.inneram.com/

No comments: