Friday, November 22, 2013

‘மனித கணினி’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி

பார் புகழும் பெண் கணித மேதை “மனித கணினி” திருமதி.சகுந்தலா தேவி(kanitha methai sagunthala) பெங்களூரில் பிறந்தவர்.சாதாரண குடும்பத்தில் 04-11-1939 பிறந்தவர்
மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் ‘மனித கணினி’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, தனது கணித ஆற்றலால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி, தனது ஆற்றலை 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நிரூபித்தார்.

1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி.
தன் திறமையை உலகுகலளித்த சகுந்தலா தேவி அனைவருக்கும் ஏற்ற வகையில் படித்து பயன் பெற கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.

No comments: