Saturday, November 23, 2013

கருவுறுதல் சக்தியை தரவல்ல சில உணவுகள் மற்றும் சில ஆரோக்கியமான பழக்கங்கள்

பெற்றோர் ஆவது தாய்மை அடைவது மிகவும் மகிழ்வைத் தரக் கூடியது.
கருவுறுதல் சக்தியை தரவல்ல சில ஊட்ட சக்தி தரும் உணவுகள் உட்கொள்வதால் கருவுறுதலுக்கு வாய்ப்பு அதிகமாகின்றது . கொழுப்பு சத்துகள் அடங்கிய உணவு பொருகளை குறைக்க வேண்டும் அதே நேரத்தில் தேவையான உணவு பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் . ஆல்கஹால்( மது )சிகரெட், கபைன் கலந்த பானங்களையும் நீக்கி விட வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில நல்ல பழக்கவழக்கங்கள் கருவுறுதல் சக்தியை தரும் . இது இரு பாலரும் கடைபிடிக்க வேண்டும். சரியான உணவுகள் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இந்த பிரச்சினை ஏற்படும். சிலருக்கு பாலுணர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சரியாக இருக்காது. அதனால் அவர்களால் உறவில் சரியாக ஈடுபட முடியாது.


1 . பூண்டு

 எப்போதும் பல்வேறு சுகாதார நன்மைகள் தரக் கூடியது. பூண்டு   உடலில்  இரத்த ஓட்டம் மேம்படுத்தி   பாலுணர்ச்சி வர உதவும்  . வெறும் வயிற்றில் பூண்டு  தினமும் உண்பது  இரத்த அழுத்தம் வராமல் தடுத்து மற்றும் கொழுப்பை குறைக்கிறது.அதனால் கருவுறாமை நிலையை போராட உதவும். இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.
2 . மீன்

மீன்  உடல் வளத்தை மேம்படுத்த உதவும் .விந்து தரத்தை மீனில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் மூலம் மேம்படுத்தலாம்.

3 . புதிய பழங்கள்

புதிய பழங்களில்  விந்து மற்றும் சூல்வித்துக்கள் சாத்தியயங்கள்  பல பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது, இது வைட்டமின் சி உதவியுடன் மேம்படுத்தப்பட முடியும் . ஆரஞ்சு, சாத்துக்குடி , எலுமிச்சை மற்றும் மாம்பழம் போன்ற பழங்கள் நமது உடலில் உள்ள வளத்தை அதிகரித்து மிகவும் ஆதரவாக உள்ளன. இந்த பழங்கள் நன்றாக வளத்தை வழங்குகிறது. இவைகளில்  ஆண்டியாக்ஸிடண்ட்கள் அதிக அளவில் உள்ளது.
மாதுளை இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும். ஸ்ட்ராபெர்ரியில் கருவுறுதலை அதிகரிக்கும் வைட்டமின் பி மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. மேலும் இதை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
வாழைப்பழத்தை சாப்பிட்டால், இரும்பு சக்தி மட்டும் கிடைப்பதில்லை. அவை பாலுணர்வை அதிகரிக்கும் ஹார்மோன்களையும் தூண்டும். மேலும் இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்,பாலியல் உறுப்புகளை நன்கு ஆரோக்கியமானதாகவும் வைக்கும்.அத்திப்பழத்திலும் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவுறுதலின் அளவையும் அதிகரிக்கும் தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.


4 . பாதாம் பருப்பு ,ஆல்மண்டு

பாதாம் பருப்பு ,ஆல்மண்டு,முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகள் கருக்கள் பாதுகாப்புக்கு உதவுகிறது  மற்றும் கருச்சிதைவையும்  தடுக்கிறது. இவைகளில்  வைட்டமின் E நிரப்பப்பட்டுள்ளன.
முந்திரியில் இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்.
.
5 . முட்டைகள்

 முட்டை வளர்ந்து வரும் கருக்கள் செல் வளர்ச்சி மற்றும் செல் பிரிவின் வளர்ச்சிக்கு உதவுகிறது இதில்  புரதம் நிறைய உள்ளன  . பிறப்பு குறைபாடுகள் ஃபோலேட் உதவியுடன் குறைக்க முடியும். முட்டை உள்ளே ஃபோலிக் அமிலம்  குழந்தை மூளை வளர்ச்சிக்கு   காரணியாக இருக்கிறது .

6 . முழு பாலாடை

கிரீம் நிரப்பப்பட்ட முழு கிரீம்  பால் மற்றும் பால் பொருட்கள் பச்சை வெங்காயம் , கருப்பட்டி ,உளுந்து , வெள்ளை பூண்டு கருவுறுதல் மற்றும் கரு  உற்பத்தியை  அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

 ... கேளுநீ கெர்ப்பந்தான் வாழ்வதற்கு
கெடியான நன்னாங்கள்ளி வேரு
ஆளவேயரைத்துப் புன்னைக்காய் போலே
ஆவின்வெண்ணெய் பாக்களவு கலந்து
நீளநீகுளித்த முதல் மூன்றுநாளும்
நினைவாகத் தானருந்த கெர்ப்பமுண்டாம்
கோளறவே பத்தியந்தான் புளிபுகையும்
கொள்ளாம லாவின்பால் சோறுமுண்ணே.

- அகத்தியர்.

No comments: