Tuesday, November 5, 2013

ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் விடுங்கள்..

  நான் பிறக்கும் பொழுது கோவை மாவட்டத்தில் இருந்தது.இப்பொழுது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. பழநி,உடுமலைப்பேட்டை,தாராபுரம் நகர்களுக்கு மத்தியில் இருக்கிறது.

  நான் மூன்று வயதில் தாயை இழந்தவன்.என தந்தை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்கள்.என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள் ஐந்து சகோதரிகள்.

  அல்லாஹ்வின் உதவியால் அனைவரும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நலமாக இருக்கின்றார்கள்.
என தந்தை ஆசிரியர்.இஸ்லாமிய ஆரம்ப பள்ளியை என தாத்தா ஆரம்பிக்க என் தந்தை தொடர்ந்தார்.
இன்று வரை அந்த பள்ளி வாழையடி வாழையாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

என் தந்தையை காண வரும் ஆலிம் பெருமக்களும் தப்லீக் ஜமாஅத்தார்களும் ஏழு ஆண்களில் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் விடுங்கள் என்று கூற அதனால் உந்தப் பட்ட நான் என தந்தயிடம் போராடி எட்டாவது வகுப்பை பாதியில் நிறுத்தி விட்டு 12 வயதில் ஓத புறப்பட்டேனலால்பேட்டை மதரஸாவில் பட்டம் வாங்கினேன்.பின்பு தேவ்பந்தியில் 3 ஆண்டுகள் ஓதினேன்.பின்பு 7 ஆண்டுகள் நீடுர் மதரஸாவில் பணியாற்றினேன்.

 நீடுர் மக்களின் நல் உதவியால் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன்.சிதம்பரத்தில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன்.

 இன்ஷா அல்லாஹ் நான் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்த நண்பர்களைப் பற்றி பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.


                                       மொவ்லவி கணியூர் இஸ்மாயில் நாஜி

No comments: