Tuesday, December 10, 2013

வாக்கு


வாக்குத் தவறி
நாக்குப் பிறழ்ந்தவர்கள்
நாசமாகட்டும்

மோசடி செய்து
வயிறு வளர்க்க நினைப்பவர்
மோசம் போகட்டும்

பொய்யும் புரட்டும்
பாதுகாக்குமென நம்பியவர்
பொலிவிழந்து போகட்டும்

நிஜத்தை மறைத்து
சதிசெய்யும் வீணர்கள்
நிர்மூலமாகட்டும்,
நிர்மூலமாகட்டும்
நிர்மூலமாகட்டும்...!!

#குடிக்கக் கஞ்சியற்று
குண்டிக்குத் துணியுமின்றி
குருடராய்ப் போகட்டும்


by Nisha Mansur










-----------------------------------------------
வாக்குக் சொல்லி
போக்குப் காட்டி
காலம் கடந்தாயிற்று

மோசடி செய்ய மனமில்லை
வாக்கை நிறைவேற்ற வழியறியவில்லை
வாக்கை நிறைவேற்றும் வழியை தேடுகின்றேன்

வாக்கு கொடுக்குமுன் என்னிலை நான் அறியாமல் போனேன்
வாக்கை பாதுகாக்க நான் படும் வேதனை நானே அறிவேன்
வாக்கைப் பெற்றவர் இன்னும் என்னை நம்பி நிற்கிறார்
வாழ்க்கையில் பொய்யும் புரட்டும் பேசுவது என் செயலல்ல
வாக்கை கொடுத்தது உண்மையாகவே உள்ளது 
வாக்கை கொடுத்தது கொடுத்தபடியே நிற்கிறது
வாக்கை கொடுத்ததை நிறைவேற்றாமையால் பொலிவிழந்து நிற்கிறேன்
வாக்கை நிறைவேற்றாமல் நிற்பது அமானிதமாக நிற்கிறது
அமானிதம் திருப்பித் தரப் படவேண்டும்
அமானிதம் திருப்பித் தரப் படாமல் போனால் இறைவன் பார்வையிலும் குற்றமாகும்
அமானிதம் திருப்பித் தர
வாக்கை நிறைவேற்ற
இறைவனின் அருள் நாடி நிற்கிறேன்
இறைவன் அருளால் இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) வாக்கு நிறைவேற்றப் படும்



இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.  
 குர்ஆன்- 23:8.


                                                by முகம்மது அலி ஜின்னா

No comments: