Saturday, December 28, 2013

அரூப வணக்கம்

அரூப வணக்கம் (-அதில்)
இரண்டு இல்லை !
ஒன்றில் உண்டு
ஒன்றாய் உண்டு !

ஒருவன் மோட்டார் பைக் ஓட்டிச் செல்வது வழக்கத்தில் இருக்குமானால், இவன் கை, கால்கள் தானாகவே சாலை மேடு பள்ளங்கள் வளைவுகள் போன்றப் பயணச் சூழ் நிலைகளுக்குத் தகுந்தார்ப் போலவும், மோட்டார் வாகனம் தன் உருப்புபோலவும் வாகனத்தை இயக்கிக் கொண்டு செல்லுவான். வாகனமும் இவனின் விருப்பபடியே செல்லும்.

குதிரையில் ஒரு மனிதன் பயணம் செல்வது வழக்கமானால், குதிரையின் கண்கள் பதைத் தெரியும்படி கடிவாலம்மிட்டு சவாறிச்  செல்வான். இல்லையேல் குதிரை இவன் விருப்படிச் செல்லாமல் அதன் கண்களுக்குத் தெரியும் பக்கம் சிலசமயம் தடுமாறிச் செல்ல முற்படலாம்.

முன்பெல்லாம் எல்லா ஊர்களிலும் குதிரை வண்டிச் சவாரிகள்தான் உண்டு. ஆட்டோக்கள் இல்லாதக் காலம். பெரும்பாலும் குதிரை அதிரையில் காலையில் புகைவண்டி நிலையம் செல்வது வழக்கம். தாயகம் வருவபவர்களை அந்த வாடகை குதிரை வண்டி மூலம் அவர்கள் இல்லம் அழைத்து வருவது வழக்கம்.

புகை வண்டி நிலையம் தவிர வேறு இடங்களுக்கு செல்ல காலையில் குதிரை வண்டிக்காரர் குதிரையை வண்டியில் பூட்டிச் சென்றால் வண்டிக்காரன் கவனம் கொஞ்சம் குறைந்தால் குதிரை தானாகவே புகை வண்டி நிலையம் தான் செல்லும். அதுபோல் நடு இரவில் மாட்டு வண்டிக்கரான் அரைகுறை உறக்கம் உறங்கிக் கொண்டும், மாடுகள் சரியாக வழக்கமாகச் செல்லும் வழியிலேயே சென்று அவன் வீட்டைத்தான் அடையும்.

குதிரை, மாடுகள் சில சமயம் ஓட்டிகளின் விருப்பத்திற்கு மாற்றமாக நடப்பதும் உண்டு. அச்சமயம் ஓட்டியினால் பலத்த அடி வாங்கியபின் அவைகள் படிந்து செல்லும். இவைகளெல்லாம் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் பார்த்தவைகள்.

மோட்டார் வாகனம் அதற்கு மனம் இல்லை. அதனால் ஓட்டியின் விருப்பபடியே செலுத்தப்படும், செல்லும். ஆனால் குதிரை, மாடுகள் அவ்வாறு அல்ல. அவைகளுக்கு (உள்ளமை) மனம் இருப்பதால் சில சமயம் ஓட்டியின் விருப்பத்திற்கு ஏற்ப இணங்குவதும் இல்லை.

சிலசமயம் நம் வாழ்வில் நாம் வேறு கவனத்தில் முழுவதும் மூழ்கி எதயையும்(உணவைச்) உண்டால், சாப்பிட்ட நினைவே இருக்காது. மீண்டும் சாப்பிடத் தூண்டும். என் கல்லூரி வாழ்வில் ஒருசமயம் மாணவர்கள் வேலை நிறுத்தம் (ஸ்ட்ரைக்) செய்தார்கள். அதனில் முழுமையாக ஈடுபட்ட சக மாணவன் ஒருவன் போராட்டம் முடிந்தவுடன் வழக்கமாக சாப்பிடும் உணவு விடுதியில் போராட்டம் சம்பந்தமாகவே உச்சக்கட்ட காரசாரமாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் கேட்டான். விடுதியாளர் தண்ணீர் தந்து குடித்த பின் மீண்டும் விறுவிறுப்பாகப் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது "நான் தண்ணீர் கேட்டேன் நீங்கள் தண்ணீர் தரவில்லை", என்று கூறி மீண்டும் அதே அளவு தண்ணீர் வங்கிக் குடிதான்.

தண்ணீர் குடிக்கும்போது தண்ணீர் குடிக்கிறோம் என்ற கவனம் இல்லாததால் தாகம் அடங்கவில்லை. (இங்கு அவன் முன்பு குடித்த தண்ணீர் என்ன வாச்சு என்ற கேள்வி எழலாம். உச்சகட்ட உணர்வில் குடித்தத் தண்ணீர் எல்லாம் இவன் உணர்வாகவும், வேர்வையாகவும் வெளியாகிவிட்டது.) அதனால் இவன் தண்ணீர் குடிக்கவில்லை என்றே மீண்டும் தண்ணீர் கேட்கிறான். அவன் மனமும் செயலும் ஒன்றாக இல்லாததினால் அங்கு முன்பு குடித்த தண்ணீர் அவனுக்கு ஞாபகம் இல்லை.

நோக்கத்திற்கேற்பவும், கவனத்தோடும் செயல்கள் இருக்குமானால் அச்செயலைச் செய்கிற அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும். அல்லது தொடர்புடைய அனைத்தும் இணக்கமான முறையில் செயல் படுகிறது. அல்லது அனைத்தும் இணங்கி, வணங்கி செயல்படுகிறது என்பதாகும்.

ஒன்று என்ற ஒன்றித்த நிலையில் செயல்கள் நடைப்பெற்றால் அச்செயல்கள் செய்யும் அனைத்தும் இணக்கமான வணக்கத்தில் இருக்கிறது என்பதாகும். ஒவ்வொன்றும் இணங்கி வணகி நடக்கவில்லை என்றால் விருப்பிய செயல் இருக்காது.

மனிதன் இறை வணக்கத்தில் இறைவனை வணங்குகிறோம் என்ற எண்ணம் முதலில் கொண்டு பின் வணங்கும் எண்ணம், செயல்கள் இருக்கவேண்டும். அவ்வாறு நிகழ்த்தும்போது வணக்கம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள்; செயல்கள், அதனைத்தவிர சம்பந்தமில்லாத வேறு எண்ணம், செயல் மிக மிகச்சொற்பம்கூட அவ்வணக்கத்தில் இருக்கக்கூட்டது. இருந்தால் அது முழுமையான வணக்கம் அல்ல, அல்லது வணக்கமே அல்ல. வணக்கத்தில் வணங்குகிறோம் என்ற எண்ணமே இல்லாது வணக்கம் சார்ந்த எண்ணம், செயல் நிகழும்போது அதுவே தெளிவான வணக்கம் ஆகும். அதுதான் வணக்கம்.

வணக்கத்தில் வணங்குபவன் வணக்கப்படுவதில் ஒன்றாய் கரைந்து இரண்டு என்ற உணர்வே இல்லாது வணக்குவதுதான் வணக்கம். அதைத்தான் இறை விரும்பும்.

வணக்கத்தில் "தான்" "நான்" என்ற அகந்தைகள் அழிய வேண்டும். அதன் கருத்தாவது தான் என்ற தன் நிலையையும், இறைவன் என்ற இறை நிலையையுமான அவ்விரு நிலை எண்ணங்கள் ஒரே நிலையில் இல்லாது வணக்கம் என்ற ஒரே எண்ணத்தின் உணர்வின் செயல் நிகழ வேண்டும். மாறாக அவ்வாறு இல்லாது வணங்கும் எண்ணத்தில் வேறு வணக்கம் சம்பந்தமில்லாததான எண்ணம், செயல் கலந்து வணக்கம் நிகழ்ந்தால் அது அடிபணிதல் என்ற வழிபாடு அல்லது துதிபாடுதான் ஆகும். அது வணக்கம் ஆகாது; அல்ல. வணக்கம் என்றாலே அங்கு ஒன்றாகும் இறைச் சந்திப்பு நிலை ஏற்பட வேண்டும். அதுதான் பூரண அரூப வணக்கம் ஆகும். அதுவே வணக்கம்.

அரூப வணக்கத்திற்கு இரண்டிருப்பு என்ற இருவுள்ளமை இல்லை. வணங்குபவனும் வணங்கப்படுவதும் ஒரே உள்ளமையின் இரு நிலைகள். வணக்கத்தில் வணங்குபவன், வணங்கப்படுவது ஓர்மையில் பிசகின்றி இரண்டற்று; ஒருமையில் ஒன்றாய் உணர்ந்து; ஒன்றில் ஒன்றாய் ஐக்கியமாகி; இருமையிழந்து இருப்பது அரூப வணக்கம்.
நபிதாஸ்
Source : http://nijampage.blogspot.in/

No comments: