Sunday, December 29, 2013

போர்வாட்கள் மற்றும் குறுவாட்கள்...!!


நீதியின் போர்வாட்கள்
அநீதிக்கு சாமரம்வீச,
துரோகம் மின்னும் கள்ளச்சிரிப்புடன்
மேடையேறுகின்றன குறுவாட்கள்...!!

முனை மழுங்கிய கிழட்டு வாட்கள்
சகுனித்தனத்தில் சாணைபிடிக்க,
ஆடம்பர மோகிகளான சோம்பேறி வாட்களோ
போர்க்களம் கண்டிராத தளபதிகள் காலில்
கெஞ்சிக்கெஞ்சித் தஞ்சமடைந்தன.. !!

ஆசைநாயகிகள் முந்தானையில்
ஒளிந்திருக்கும் குறுவாள்
ஐப்ரோமுனை
கூராக்க மட்டுமின்றி
சில போதைப்பன்றிகளை விரட்டவும் என்றறிக..!!

சூன்யத்தில் வீசப்படும் மாயவாள் அல்ல இது,
சொரணையை உசுப்பும்
சூட்சுமவாள் ..!!

எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத காற்றைப் போலத் திகழுங்கள்..!!

-மீகையீல் நுஐமி

 உறையிலிருக்கும்
வாளின்
சோகத்துக்குக்
காரணம்
தனிமை அல்ல...!!

 வீச்சின் நுட்பம் வாளின் கூர்மையிலோ பகட்டிலோ இல்லை,
வீசும் வன்கரங்களின் உறுதியில் உள்ளது..!!


Nisha Mansur

No comments: