Saturday, December 28, 2013

சுயம்

கிடைத்தால் பரவாயில்லை
கிடைக்காவிடில் தப்பில்லை

இருந்தால் மகிழ்ச்சிதான்
இல்லையெனில் கவலையில்லை

காரில் செல்லும்போது கர்வமேதுமில்லை
நடந்து போகும்போது சுயஇரக்கமும் இல்லை

வீட்டைத் தூக்கிக்கொண்டு சுமக்க இயலாதென்பதால்
வீட்டின் வசதிகளையும் அப்படியே

நாடோடி மனசு வாய்த்ததனால்
இழப்புகள் ஏதும் மன அமைதியைக் குலைத்ததில்லை

இப்படியே இருந்துவிட்டால்
எப்படியும் இருந்துவிடலாம்...!!

-நிஷா மன்சூர்

2009 ஹஜ்ஜின்போது முஜ்தலிபாவில்
சாலையோர உறக்கத்தில் என் மகன்

No comments: