Sunday, December 29, 2013

இவனை ஒன்றிணைக்க..

சாதியால்
பிறர் சதியால்
மதத்தால்
மனத்தால்

பிரிந்துகிடக்கும்
மனித இனம்

இன்று
பணத்தால்
பதவியால்
பொருளியலால்

பிரிந்து கொண்டோ
இருக்கிறது

கால்நடைகளுக்கு
இல்லாத பகுத்தறிவு
இவனுக்கு கிடைத்தது
பிரிந்து கொண்டே
போவதற்கு தானா

அனைத்தையும் ஒன்று
இணைத்திட்டோம்
அதன் மூலம் விண்ணுக்கு
ராக்கெட்டை ஏவிட்டோம்
என சொல்லும் விஞ்ஞானம்

இவனை ஒன்றிணைக்க ஏன்
இவனுக்கு வழங்க வில்லை ஞானம் ..


பஷீர் Bassheer Ahamed

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த ஞானம் வரவில்லையோ...?