Friday, December 13, 2013

மனநிறைவு

கிடைத்த பொருளில் நிறைவு குன்றிவிடுகிறது
கிடைக்காத பொருளில் ஆர்வம் அதிகமாகிறது

கட்டையான மனைவியை பெற்றவன் உயரமான பெண்ணை நாடுவான்

உயரமான மனைவியை பெற்றவன் கட்டையான பெண்ணை நாடுவான் (இது பொதுப்படையான கருத்து அல்ல உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை )

கருப்பு சிகப்பை நாடுவதும் சிகப்பு கருப்பை நாடுவதும் இயல்பு
மாற்றம் மகிழ்வை தரலாம் அது உய்ர்வைதராமலும் போகலாம் (உதாரனத்திற்க்கு தந்தவை உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை )

மனநிறைவு மரணம் வரும் வரை யாருக்கும் வராது . மனநிறைவு வந்தால் தொடர்ந்த ஊக்க சக்தி குறைந்து விடும் . இன்று நிறைவு, நாளை குறைவு, மறுநாள் நிறைவு இது தொடரும் .இது மனித இயல்பு . சைத்தான் உடனிருந்து உள்ளத்தை வெல்ல முயல்வான் .தொடர்ந்து அவனிடம் போராட இறை அருள் நாட வேண்டும் .

என் எழுத்தில் நிறைவு கொள்வதில்லை இருப்பினும் மகிழ்வை அடைகின்றேன் .
இன்னும் முயல வேண்டும் என்ற தேட்டம்.
அந்த தேட்டம் ஊக்கத்தை தருவதில் ஆர்வம்
அந்த ஆர்வத்தில் நிறைவு .
மனமிறைவு காரியத்திற்கு காரியம் மாறுபடுகின்றது இருப்பினும வருத்தம் என்னை அண்ட விடாமல் முயல்கின்றேன் .

No comments: