Saturday, December 7, 2013

கவிதை தொகுதி .... ஆரம்பம்..!!

முதல் பத்து - 01
--------------------------------

மூணு பைசாவுக்கு
அஞ்சு மாங்கா பிஞ்சு !

சித்ரா பௌர்ணமியில்
கீரன் சொற்பொழிவு !

கோடை விடுமுறையில்
சைக்கிள் "ரிம்மின் "
டக்கர டக்கர !

ஓடியொளிந்த
தம்பி - தங்கைகளின்
ச்சீ..யொலிகள்..

பின்பான பாச அழைப்புகள்..!!


மூத்தவனின் தோள்வருடல்கள்...

தீபாவளி
கவுன்ட் டவுன் !

மழை பார்த்தல் !

போலீசு பயம் !

மாடி வீட்டு
சுதாவின்
கன்னம் பூசிய வெட்கம் !

காத்தாடி வெரீத்தல் !

அப்பாவின் கோபம் !

அம்மாவின்
சமையலறைப் பாடல் !

தூக்கில் தொங்கிய நண்பனை
உயிரோடு இறக்கி,
பெசன்ட் நகர்
கமலாக்கா
குடிசையில்
அடித்த
"சுண்டக்கஞ்சி " !

மேடைகள்,
பொன்னாடைகள்,
பாராட்டுக்கள் ..!!

மனைவியின் பிரசவ அலறல் !

குழந்தைகளின் மூத்திர வாசனை !

கடன் பாக்கி !

இன்னமும் வசூலாக வேண்டிய கடன் !

இதோ, இதோ, என்னை மோதிய
“லாரியின்”
கலர் ..!

இன்னும் என்னென்னமோ
இருக்கத்தான் இருக்கிறது
இன்னும் ..!!

........

யாரைக்
கேட்டு
"சங்கூதி " போகிறான் ..?
எனக்கு முன்னே ..?????


-ஸ்ரீராம் சர்மா
Sriram Sharma

No comments: