Sunday, December 8, 2013

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !

அகம் புதிதாக உதவுவது புத்தகம் !
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் !

அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !
அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் !

ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் !
அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் !

இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் !
உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் !

எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் !
ஏணியென உயர்த்துவது புத்தகம் !

மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் !
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் !

மனதில் மாற்றம் தருவது புத்தகம் !
மனங்களைக் கொள்ளையடிப்பது புத்தகம் !

கொடிய கோபம் தணிக்க உதவும் புத்தகம் !
கொள்கைகள் அறிந்திட உதவும் புத்தகம் !

இலக்கிய ஈடுபாடு வளர்க்கும் புத்தகம் !
இலக்கியதாகம் தணிக்கும் புத்தகம் !

விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !
விஞ்ஞானிகள் வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !

நேர்முகத்தேர்வில் தேர்வாகக் காரணம் புத்தகம் !
நேரில் பார்க்காதவரையும் நேசிக்க வைக்கும் புத்தகம் !
.
மனக்கவலை நீக்கும் மருந்து புத்தகம் !
மனக்குறைப் போக்கும் காரணி புத்தகம் !

மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் !
மனிதனைக் கண்டுபிடித்துத் தந்தது புத்தகம் !

குற்றவாளியையும் திருத்தி விடும் புத்தகம் !
குற்றங்களைக் களைந்து விடும் புத்தகம் !

நேரத்தை பயனுள்ளதாக்கும் புத்தகம் !
நேர நிர்வாகம் கற்பிக்கும் புத்தகம் !

புத்தரைப் புரிய வைக்கும் புத்தகம் !
சித்தரைச் சிந்திக்க வைக்கும் புத்தகம் !

பெரியாரின் சிந்தனை உணர்த்தும் புத்தகம் !
பெரியோரை மதிக்க வைக்கும் புத்தகம் !

அண்ணாவை அறிய வைக்கும் புத்தகம் !
அறிவைத் தெளிய வைக்கும் புத்தகம் !

திருக்குறளை தெரிய வைக்கும் புத்தகம் !
திருவை வாழ்வில் வழங்கும் புத்தகம் !

வாழ்வியல் உணர்த்துவது புத்தகம் !
வசந்தம் வர வைக்கும் புத்தகம் !

சோதனைகளைச் சாதனைகளாக்கும் புத்தகம் !
வேதனைகளை நீக்கி விவேகம் தரும் புத்தகம் !

வெற்றிகளை நமது வசமாக்கும் புத்தகம் !
தோல்விகளைத் தவிர்த்திட உதவிடும் புத்தகம் !

பலர் புகழ் பெற்றிடக் காரண்ம் புத்தகம் !
பாமரனையும் பாருக்குக் காட்டுவது புத்தகம் !

படித்திட சுகம் தரும் புத்தகம் !
படித்திட சோகம் நீக்கும் புத்தகம் !

படிக்கப் படிக்க உயர்த்திடும் புத்தகம் !
படிக்கல்லாக இருந்து உயர்த்திடும் புத்தகம் !

இரண்டு கால் மிருகத்தை மனிதனாக்கியது புத்தகம் !
இன்னல் நீக்கி இன்பம் தரும் புத்தகம் !

காட்டு மிரண்டிகளை மனிதனாக்கியது புத்தகம் !
காட்டுவாசியையும் அறிஞனாக்கியது புத்தகம் !

கரக்கக் கரக்க பால் தருமாம் காமதேனு !
படிக்கப் படிக்க பரவசம் தரும் புத்தகம் !

இரைக்க இரைக்க தண்ணீர் சுரக்கும் கிணறு !
படிக்கப் படிக்க அறிவு சுரக்கும் புத்தகம் !

உணருங்கள் மிகவும் உன்னதமானது புத்தகம் !
உடலையும் உள்ளத்தையும் செம்மையாக்கும் புத்தகம் !

தினமும் சில மணி நேரம் படியுங்கள் புத்தகம் !
தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம் !




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*



No comments: