Saturday, December 28, 2013

எங்கே[ணி]நீ


உன்பின்னே ஒளிந்து
ஒப்பீ விளையாடிய
நாட்களும்

உன் குளிர்நீரருந்தி
குதூகளித்த
நாட்களும்

உன்னுள் குதித்து
குளித்தாடிய
நாட்களும்

நாட்குறிப்புகளில் மட்டும்
பத்திரமாய்
அசலைத்தொலைத்த
நகலாய்..
---------------------------


உனது பரிட்சத்தை
எட்டி நின்றும்
ஏக்கத்துடனும்
பார்த்ததுண்டு

கயிறுதொட்டு
வாளியிறக்கி
தண்ணீர்மொண்டு
குடம் நிரப்பியத்தில்லை

ஆனால்
என் குழந்தைக்கு
அந்த
பரிட்சயம்கூடயில்லை.

---------------------------------------------

உன்
நீரெடுத்து  நீராடி
உணவு சமைத்து
உண்டோரெல்லாம்
உடலாரோக்கியத்தின்
மடியில்

மின்சார நீரருந்தி
மாசு நீரில் சமைத்து
உணவுண்போரெல்லாம்
மருந்து மாத்திரைகளின்
பிடியில்.
---------------------------------

இன்றும் சில
இடங்களில்
நீ”ர்”
ஊற்றெடுக்கிறாய்
தாய்பாலாகவல்ல
புட்டிப்பாலாக!
அதாவது
தன்னாலல்ல- மோட்டர்
தடியாலடித்து
----------------------


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 by அன்புடன் மலிக்கா
நன்றி : http://niroodai.blogspot.com/

No comments: