Saturday, January 25, 2014

பொய்மையின் மூட்டைக்குள்..!!


உண்மை பொதிந்து கிடக்கிறது,
பொய்மையின் மூட்டைக்குள்..!!

ஒரு பொய்யுடன் சமரசம் செய்துகொண்டு சல்லாபிக்கையில்
மறுபொய்
துரத்தியது கொலைவெறியுடன்..!!

குறும்பொய்களை சமாளித்து நகர்கையில்
வழிமறித்து குரூரமாய்ச் சிரித்தது,
முன்னம் சொன்ன பெரும்பொய்...!!

அவிழ்த்துக் கட்டுமுன் குதித்தெழுந்து பரவின
ஒரு மூட்டை பொய்கள்...!!

புதைத்தேன் ஒருபொய்யை,
முளைத்தது இன்னொரு புத்தம்புது பொய்...!!

ஒரு பொய்யின் மீதமர்ந்து
மறுபொய்யைச் சொல்லும்போது
முந்தைய பொய் இழுத்தது
சட்டை நுனியைப் பிடித்து...!!

நிஷா மன்சூர் Nisha Mansur

No comments: