Friday, January 10, 2014

பூக்காடு


மனப்பூவின் மணம்.
வன இருளில் பேரொளி.

பனிக்குளிரில் சூடு
கடும்வெயிலில் குளிர்

காணாத தூரத்தை
கணப்பொழுதில் போக்குவது

தனித்தனி வாகனங்களிலும்
சேர்ந்தேயிருக்கும் பயணம்.

கோபத்தீயை அணைக்கும்
குறும்புப் பனிமழை

நம்முடைய கூடுபாய்தல்.

எல்லாவற்றுக்குமான
ஒற்றைச் சொல்
ப்ரியம்.


Fakhrudeen Ibnu Hamdun

No comments: