Friday, January 24, 2014

ஏற்றுக் கொள்வதில் இடமில்லை!

சில நேரங்களில் கொடூர மனம்
அது கொடுப்பது இதமான சொல்
அதை ஏற்றுக் கொள்வதில் இடமில்லை

சில நேரங்களில் நல்ல நோக்கம்
அது சொல்வது கடின சொற்கள்
அதன் பயன்  பெறுவதில் நிறைவு கிடைக்கிறது

விளையாட்டாக உதிர்ந்த வார்த்தைகள்
விளையாட்டில் கட்டிய மணல் வீடுகள் போல் கலைந்தன
வேதனையால் கொட்டிய சொற்கள்
விசம்போல் குருதியில் சேர்ந்தன

அமைதி காத்தேன்
கடுஞ் சொற்கள் கேட்டு
உள்ளத்தில் ஊடுருவி பாதித்தும்
முகத்தில் மாற்றம் காட்டாமல் 

முல்லையின் இதழ்கள் விரிய
முல்லையின் மனம் வீசியது
முல்லையின் தேனை தேனீக்கள் உறிஞ்சின
 முல்லை பூவை பறித்து நான் சூடிக் கொண்டேன்

மனதில் மகிழ்வு தன்ந்தது
உதடுகள் மெதுவாக பிரிந்தது
அழகிய குழி கன்னத்தில் விழுந்தது
முகம் நிறத்தை கொடுத்தது

No comments: